Connect with us

உலகம்

ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் விப்ரோ.. எத்தனை ஊழியர்கள் தெரியுமா?

Published

on

உலகின் முன்னணி நிறுவனங்களிடம் இருந்து வேலை நீக்க அறிவிப்பு என்பது தினசரி செய்தியாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதும் ஒவ்வொரு நாளும் உலகின் ஒரு சில நிறுவனங்களின் வேலை நீக்க அறிவிப்பு வெளிவந்து கொண்டிருப்பதால் ஊழியர்கள் மத்தியில் நிம்மதி இல்லாத வேலை என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்பதும் தெரிந்ததே.

ஏற்கனவே கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலை நீக்கம் செய்த நிலையில் அந்த ஊழியர்களுக்கே இன்னும் வேறு வேலை கிடைக்காத நிலையில் தற்போது மீண்டும் மீண்டும் வேலை நீக்க அறிவிப்பு வெளியாகி கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான விப்ரோ நிறுவனமும் 120 ஊழியர்களை வேலை நீக்கம் செய்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இருகுறித்து ஐடி நிறுவனமான விப்ரோ குறியபோது வணிக தேவைகளின் மறுசீரமைப்பு காரணமாக அமெரிக்காவின் புளோரிடோ மாநிலத்தில் உள்ள 120 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளோம் என்று தெரிவித்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக புளோரிடோ மாநிலத்தில் உள்ள கிளையில் மட்டுமே வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் மற்ற கிளைகளில் வேலை நீக்கம் செய்யப்படவில்லை என்பது விப்ரோ ஊழியர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் செயலாக்க முகவர்கள் என்றும் மீதி உள்ளவர்கள் குழு தலைவர்கள் மற்றும் ஒரு குழு மேலாளர் என்றும் கூறப்படுகிறது. விப்ரோ பிராந்தியத்தில் ஆழ்ந்த அர்பணிப்புடன் வேலை செய்து வந்தோம் என்றும் தற்போது திடீரென வேலை நீக்கம் செய்யப்பட்டது தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த மாத தொடக்கத்தில் நியூஜெர்சியின் கிழக்கு பகுதியில் அமெரிக்காவின் தலைமையிடம்த்தை தொடக்க இருப்பதாக விப்ரோ நிறுவனம் தெரிவித்த நிலையில் தற்போது திடீரென வேலை நீக்க நடவடிக்கை குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்தியாவில் உள்ள விப்ரோ கிளைகளில் சுமார் 400 ஊழியர்கள் கடந்த ஜனவரி மாதம் வேலைநீக்கம் செய்யப்பட்டனர் என்பதும் இதற்கு மோசமான செயல் திறன் காரணம் என்று காரணம் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகரித்து வரும் வேலை நீக்கம் காரணமாக அனைத்து நாடுகளிலும் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்14 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?