Connect with us

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏன் தரம் உயர்த்தப்படவில்லை? அன்புமணி ராமதாஸ் கேள்வி!

Published

on

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டத்தின் மூலமாக கல்வியில் வளர்ச்சியும், வேலைவாய்ப்பில் மறுமலர்ச்சியும் ஏற்படும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளிகளின் தரம்

தமிழ்நாட்டில் தொடக்க நிலைப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தும் திட்டத்தின் கீழ், கடந்த 2 ஆண்டுகளாக ஒரு அரசுப் பள்ளி கூட தரம் உயர்த்தப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது. நடப்பு ஆண்டிற்கான மானியக் கோரிக்கையிலும் கூட இதுகுறித்து எந்த அறிவிப்பும் வெளிவராதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

அன்புமணி ராமதாஸ் கேள்வி

100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டால், அதன் பலன்கள் அதோடு நின்று விடாது. தரம் உயர்த்தப்பட்ட 100 உயர்நிலைப் பள்ளிகளை ஈடுசெய்வதற்கு 100 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அதே எண்ணிக்கையில் தொடக்க நிலைப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக்கப்படும். நிறைவாக, 100 தொடக்கப் பள்ளிகள் திறக்கப்படும். இதன் மூலம் கல்விக் கட்டமைப்பு விரிவாக்கப்படும்.

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தாமல் இருப்பது ஏன் என ஆளும் திமுக அரசை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி கேட்டுள்ளார். இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு இருந்தால், கடந்த 2 ஆண்டுகளில் பலநூறு புதிய பள்ளிகள் உருவாக்கப்பட்டு இருக்கும். அது கிராமப் புறங்களில் கல்வி வளர வழிவகை செய்திருக்கும். இத்தகைய சிறப்புமிக்கத் திட்டத்தை கைவிட்டு விடக்கூடாது எனவும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.‌

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?