Connect with us

தமிழ்நாடு

தமிழ்நாட்டை பற்றி பிரசாந்த் கிஷோருக்கு என்ன தெரியும்? சீறிப் பாய்ந்த சீமான்.. பரபர கேள்வி

Published

on

சென்னை: தமிழ்நாட்டை பற்றி பிரசாந்த் கிஷோருக்கு என்ன தெரியும்? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

வடஇந்தியர்கள் குறித்து அவதூறாகபேசியதற்காகவும், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதற்காகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதியப்பட்டு உள்ளது.

அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் கோரிக்கை வைத்த நிலையில், சீமான் மீது இரண்டு வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் சீமான் தற்போது பிரஷாந்த் கிஷோரை விமர்சனம் செய்துள்ளார். அதில், தமிழ்நாட்டை பற்றி பிரசாந்த் கிஷோருக்கு என்ன தெரியும்? தமிழ்நாட்டில் பல இடங்களில் வட இந்தியர்களால், தமிழர்கள் தான் தாக்கப்பட்டுள்ளனர்

பிரசாந்த் கிஷோரை பாராட்டுகிறேன். நீங்கள் பிகாரி, உங்கள் இனத்திற்கு உண்மையாக இருக்கிறீர்கள். நான் தமிழன், என் இனத்திற்கு உண்மையாக இருக்கிறேன். இன்று கூலிக்கு வந்தவர்கள், நாளை முதலாளியாக மாறுவார்கள். நிலம் அவர்கள் கைகளுக்குச் செல்லும். நாம் நிலமற்ற அடிமைகளாக இருப்போம். அதனால்தான் எச்சரிக்கிறோம். வட மாநிலத்தவர்கள் வருகையை முறைப்படுத்த வேண்டும் என்றுதான் சொல்கிறோம்

ஊழியர்களுக்கு அகவிலைப்படியை கொடுப்பதற்கு பணம் இல்லை, ஆனால் தேர்தலில் ஓட்டுக்கு ரூ.4000 வரை பணம் கொடுப்பதற்கு எங்கு இருந்து பணம் வருகிறது. திமுகவிடம் 400 கோடிக்கு பணம் வாங்கிவிட்டு இவர் வேலை செய்தார். அதன் மூலம் திமுகவை வெற்றிபெற வைத்தார். என்னிடம் 4 ரூபாய் கூட வாங்கவில்லை. ஆனால் என்னை இந்தியா முழுக்க பிரபலப்படுத்திவிட்டார். அவருக்கு என்னுடைய நன்றிகள், என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?