மெட்ராஸ் தினம் (சென்னை தினம்) கொண்டாடக் காரணம் என்ன?

January 31, 2020

கி.பி.1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி (மெட்ராஸ்) சென்னை தோற்றுவிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

அதை நினைவூட்டும் வகையில் 2004-ம் ஆண்டு முதல் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிழக்கு இந்திய கம்பெனி தாமல் வெங்கடப்பா நாயக்கரிடம் இருந்து ஒரு சிறு நிலத்தை வாங்கி சென்னை நகரத்தை உருவாக்க காரணமாக இருந்த நாளை கொண்டாடுவதே சென்னை தினமாகும்.

வந்தவாசியை ஆண்ட தாமல் வெங்கடப்பா நாயக்கர், பூந்தமல்லியை ஆண்ட தாமல் அய்யப்ப நாயக்கர் ஆகிய சகோதரர்களின் தந்தை சென்னப்ப நாயக்கர் பெயரால் சென்னை அழைக்கப்படுகிறது.

பத்திரிக்கையாளர்களான சசி நாயர், மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா, மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து உருவாக்கியதே இந்த சென்னை தினம்.

முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி, உணவுத் திருவிழா, மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

பல மாறுதல்களைக் கண்ட சென்னை, 22 ஆகஸ்ட் 2021-ம் ஆண்டு 382வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறது.

எனவே சென்னை மாநகராட்சி கட்டிடமான ரிப்பன் மாளிகை உள்ளிட்ட மாநகராட்சியின் பலவேறு கட்டிடங்களும் வண்ண விளக்குகளால் ஜொலித்துக் கொண்டு இருக்கின்றன.

ஒருவாரத்துக்குச் மெட்ராஸ் தினத்தைக் கொண்டாட சென்னை மாநகராட்சித் திட்டமிடப்பட்டுள்ளது.