Connect with us

உலகம்

வட்டி விகிதத்தை உயர்த்திய அமெரிக்க பெடரல் வங்கி.. இந்திய ரிசர்வ் வங்கியும் உயர்த்துமா?

Published

on

அமெரிக்கா பெடரல் வங்கி ஏற்கனவே 8 முறை வட்டி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் தற்போது 9வது முறையாக மீண்டும் உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக அமெரிக்க பங்கு சந்தை சரிந்துள்ள நிலையில் அமெரிக்காவை அடுத்து இந்தியாவிலும் வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை அடுத்து உலகம் முழுவதும் பணவீக்கம் அதிகரித்தது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது என்பதை அடுத்து கடந்த ஒரு ஆண்டாக பொருளாதார நெருக்கடியை கட்டுப்படுத்த உலக நாடுகள் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.

அமெரிக்காவின் பெடரல் வங்கி ஏற்கனவே 8 முறை வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் தற்போது அமெரிக்க பெடரல் வங்கி ஒன்பதாவது முறையாக ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. அமெரிக்காவின் முன்னணி வங்கிகளான சிலிக்கான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கி ஆகிய இரண்டு வங்கிகள் ரெப்போ வட்டி விகித உயர்வு காரணமாகத்தான் பெரும் இழப்பை சந்தித்து திவால் ஆகி உள்ளன. இதன் காரணமாக இம்முறை ரெப்போ வட்டி விகிதத்தை பெடரல் உயர்த்தாது எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 0.25% அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இதன் காரணமாக 4.75% என இருந்த ரெப்போ விகிதம் 5.00 என உயர்ந்துள்ளது.

அமெரிக்காவை அடுத்த பிரிட்டனும் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது என்பதும், ஏற்கனவே 10 முறை உயர்த்திய பிரிட்டன் மத்திய வங்கி தற்போது11 வது முறையாக ரெப்போ வட்டி விகிததத்தை உயர்த்தி உள்ளது. இந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியும் இன்னும் ஓரி நாளில் ரெப்போ வட்டி விகித உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதன் காரணமாக உலகம் முழுவதும் பங்குச்சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது என்றும் இந்திய பங்குச் சந்தையும் இன்று சரிவில் தான் தற்போது வர்த்தகமாகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?