Connect with us

தமிழ்நாடு

கொடநாடு கொலை வழக்கால் முதல்வருக்கு பயம், பதற்றம்: தினகரன் விளாசல்!

Published

on

கொடநாடு கொலை விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் அடிபடுவது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் இந்த கொலை வழக்கு குறித்து தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வழக்கமாக கடுமையான விமர்சனங்களை முன்வைக்கு அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கொடநாடு கொலை விவகாரம் குறித்து தற்போது தான் பேச ஆரம்பித்துள்ளார். திருவாரூரில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் தினகரன்.

அப்போது, கொடநாடு கொலை விவகாரத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிக்க வேண்டும். கொடநாடு கொலை கொள்ளை சம்பவங்களில் தொடர்புடையவர்கள், கைது செய்யப்பட்டவர்கள் பல்வேறு விவரங்களை கூறியுள்ளனர். இந்த 5 பேர் இறப்பில் சந்தேகம் உள்ளது. இதில் முதல்வர் பெயர் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக முதல்வருக்கு பயம் பதற்றம் உள்ளது தெரிகிறது என்றார் தினகரன்.

மேலும், கொட நாடு கொலை கொள்ளை வழக்கில் தமிழக காவல்துறையினர் கைது செய்து வந்தவர்களை நீதிபதி சிறைக்கு அனுப்பமறுத்துள்ளது முதல்வருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சிலை கடத்தல் பிரிவு பொன்மாணிக்கவேல் கண்காணிப்பது போன்று, உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி மூலம் முதல்வர் மீதான வழக்கை கண்காணிக்க வேண்டும். சரியான விசாரணையை அடுத்து உப்பைத் தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றார் அதிரடியாக.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?