Connect with us

இந்தியா

ப்ரீபெய்டு திட்டங்கள் 30 நாட்களுக்கு நிர்ணயிக்க வேண்டும்: டிராய் உத்தரவு

Published

on

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரிபெய்டு திட்டங்கள் 30 நாட்களுக்கு வேலிடிட்டி, இருந்த நிலையில் தற்போது அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 28 நாட்கள் மட்டுமே பிரீபெய்டு காலத்தை நிர்ணயித்து உள்ளன. இந்த நிலையில் பிரிபெய்டு காலத் திட்டத்தை 30 நாட்களுக்கு நீடிக்க வேண்டுமென தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.

ஒரு மாதத்திற்கான செல்போன் ரீசார்ஜ் என்பது 30 நாட்களுக்கு என வேலிடிட்டி இருந்த நிலையில் திடீரென ஏர்டெல், வோடபோன், ஐடியா, ஜியோ உள்ளிட்ட தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் 30 நாட்கள் வேலிடிட்டிக்கு பதிலாக 28 நாட்கள் வேலிடிட்டி என மாற்றியது.

இதன் காரணமாக ஒரு ஆண்டுக்கு 12 முறை மட்டுமே ரீசார்ஜ் செய்து வந்த பயனாளிகள் 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த நிலையில் ப்ரீபெய்ட் வேலிடிட்டி காலத்தை 30 நாட்களுக்கு நீடிக்க வேண்டுமென பயனாளிகள் கடந்த பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில் தற்போது இது குறித்த உத்தரவை டிராய் வெளியிட்டுள்ளது.

பிரிபெய்டு வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாதத்திற்கு 28 நாட்களுக்கு பதிலாக 30 நாட்கள் வேலிடிட்டி திட்டமொன்றை கண்டிப்பாக அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அமல்படுத்த வேண்டும் என டிராய் உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இனி ஒரு ஆண்டுக்கு ரீசார்ஜ் செய்யும் எண்ணிக்கை 12 ஆக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஒரு மாதத்துக்கான வேலிடிட்டி 30 நாட்கள் என உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ட்ராய் உத்தரவு படி இனி மற்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் 30 நாட்கள் வேலிடிட்டி திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?