Connect with us

தமிழ்நாடு

தோட்டத்தில் வைத்து மாணவியை நாசம் செய்த ஆசிரியர்!

Published

on

வேலியே பயிரை மேய்ந்தது போல உடற்பயிற்சி ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்துள்ளது. இதனையடுத்து அந்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சேலம் வேத விகாஸ் மேல்நிலைப்பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்தார் பாலச்சந்திரன் என்ற 23 வயதே ஆன இளைஞர் ஒருவர். அந்த பள்ளியில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மாணவி 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவியின் மீது அந்த ஆசிரியர் ஆசை கொண்டு தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவர் அந்த மாணவிக்கு பாலியல் தொல்லைதான் கொடுத்து வந்துள்ளார்.

மாணவி ரேகாவுக்கு பள்ளியில் படிக்கும் போது தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் ஆசிரியர் பாலச்சந்திரன். இந்நிலையில் அந்த மாணவி தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேர்ந்துவிட்டார். ஆனாலும் மாணவியை விடாத அந்த ஆசிரியர் மாணவியின் சொந்த ஊரான ஸ்ரீவில்லிபுத்தூருக்கு சென்று மாணவியை சந்தித்து, மாணவியின் குடும்பத்தினருக்கு சொந்தமான தோட்டத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

மாணவியுடன் தனிமையில் இருந்த ஆசிரியர் பாலச்சந்திரன் தனது காம லீலையை ஆரம்பித்துள்ளார். மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதை அறிந்த மாணவியின் பெற்றோர் இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து மாணவியிடம் தவறாக நடந்துகொண்ட ஆசிரியர் பாலச்சந்திரன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

வணிகம்14 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?