Connect with us

தமிழ்நாடு

துணை முதல்வராக இருந்தபோது விட்ட அறிக்கை: முதல்வர் ஸ்டாலினை சீண்டிய வானதி சீனிவாசன்!

Published

on

நிலக்கரி சுரங்கம் ஏலம் தொடர்பாக திமுக, காங்கிரஸ், அதிமுக, பாமக, விசிக கட்சிகள் சார்பாக கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பல்வேறு கட்சி உறுப்பினர்கள் பேசி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் பாஜக சார்பாக பேசிய வானதி சீனிவாசன், முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வராக இருந்தபோது விட்ட அறிக்கையை குறிப்பிட்டு பேசினார்.

Vanathi

பாஜக சார்பாக பேசிய வானதி சீனிவாசன், ஒரு மனிதனுக்கு சோறு வேண்டுமா, கரண்ட் வேண்டுமா என்று கேட்டால் சோறுதான் முக்கியம். அதில் மாற்றுக்கருத்து இல்லை. டெல்டா பகுதியில் விவசாயம் எவ்வளவும் முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் ஒரு ஏலம் வரும்போது உள்ளூரில் உள்ள வருவாய்த்துறையுடைய அனுமதி எல்லாம் தெரிவித்த பின்னர்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இந்த விவகாரத்தில் வருவாய்த்துறை மற்றும் அந்த மாவட்ட நிர்வாகம் இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுத்தது? ஏன் மத்திய அரசுக்கு முன்னரே தகவல் சொல்லவில்லை.

நிறையபேர் பேசும்போது கார்ப்பரேட்டுக்கு கொடுத்துவிடுவார்கள் அம்பானி, அதானி என்றெல்லாம் பேசினார்கள். 2011 ஜனவரி 4-ஆம் தேதி இன்றைய முதல்வர் அன்றைய துணை முதல்வராக இருந்தபோது 100 கோடி ரூபாய் முதலீட்டில் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்டோடு ஒரு ஒப்பந்தத்தை போட்டு 1500 பேருக்கு வேலை கிடைக்கும், 3600 கோடி ரூபாய் வணிகம் நடக்கும் என சொல்லி அறிக்கை விட்டிருக்கிறார். அந்த அறிக்கை இன்றும் இருக்கிறது என்று பதில் அளித்தார் வானதி சீனிவாசன்.

மேலும் இந்த நிலக்கரி சுரங்க விவகாரத்தில் 3 டெல்டா பகுதிகளில் ஏலத்திற்கு அறிவித்ததை மாற்ற வேண்டும். இந்த அறிவிப்பில் இருந்து மத்திய அரசு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக பாஜக சார்பாக நிலக்கரித்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளோம். இது தொடர்பாக வலியுறுத்தவும் செய்வோம் என தெரிவித்தார்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?