இந்தியா
திடீரென அதிகரிக்கும் கொரோனா தொற்று – தமிழகத்தில் 144 தடை வருமா?….
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் அதேபோல் இன்னொரு பக்கமோ ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக தமிழக அரசின் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது என்பதும் சென்னை மக்களுக்கு சென்னை மாநகராட்சி ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
எனவே, தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.மேலும், இதுபற்றி தமிழக அரசும் அதை பரிசீலனை செய்து வருவதாகவும் டிசம்பர் 31ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பில் இது குறித்த தகவல் வெளியாகலாம் என்றும் கூறப்பட்டு வருகிறது.
டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேற்கு வங்கம், குஜராத் மற்றும் கர்நாடக மாநிலங்களின் பல மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்துள்ளது.
இந்நிலையில், தேவை ஏற்பட்டால், பெரிய அளவில் மக்கள் கூடுவதை தடுக்க மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பயன்படுத்தலாம் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே, தமிழக அரசு இதுபற்றி விரைவில் முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..