Connect with us

தமிழ்நாடு

அமைச்சர்களுக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரிகள்: தமிழக அரசியலில் பரபரப்பு!

Published

on

சில தினங்களுக்கு முன்னர் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா மரண விவகாரத்தில் சசிகலா குடும்பத்துக்கு எதிராகவும், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனையும் கைது செய்து விசாரிக்க வேண்டும் என ஆவேசமாக பேசினார். இதற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமாரும் ஆதரவு தெரிவித்தார்.

இந்த விவகாரம் அரசியல் மட்டத்தில் மட்டுமல்லாமல் ஐஏஎஸ் அதிகாரிகள் வட்டாரத்திலும் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, ஐஏஎஸ் அதிகாரி டி.வி.சோமநாதன் தலைமையில் ஐஏஎஸ் அதிகாரிகள் நல சங்கத்தின் நிர்வாகக் குழு கூடி ஆலோசனை நடத்தியுள்ளது. அதில் ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக குற்றம்சாட்டிய அமைச்சர் சண்முகத்தையும், அவருக்கு ஆதரவளித்த அமைச்சர் ஜெயக்குமாரையும் கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அமைச்சர்களை அடக்கி வைக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் வலியுறுத்த உள்ளதாக முடிவு செய்துள்ளனர். இதனை ஒரு தீர்மானமாக நிறைவேற்றி அதனை முதல்வருக்கும், தலைமைச்செயலாளருக்கும் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐஏஎஸ் அதிகாரிகள், அமைச்சர்களுக்கு எதிராக அணி திரண்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஊடகங்களிலும் விவாதமாக தற்போது மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வணிகம்10 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?