இந்தியா
பாகிஸ்தான் குரலை எதிரொலிக்கும் முதல்வர்: மத்திய அமைச்சர் விமர்சனம்!
பாகிஸ்தானின் குரலாகவே தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசுகிறார் என மத்திய அமைச்சர் கடுமையாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில ஆண்டுகளாகவே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பாஜகவையும், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
குறிப்பாக வாட்ஸ்அப் மூலம் பாஜக பொய்களை பரப்புகிறது என்றும் நாடு முழுவதும் மதத்துக்கு எதிராக பிரச்சனைகளையும் கலவரத்தின் தூண்டுகிறது என்ற சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்ததாக பொய்யான தகவலை கூறுகிறது என்றும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்
சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்த சந்தேகத்தை எழுப்பியது பாகிஸ்தான் மட்டுமே என்றும் பாகிஸ்தான் குரலையே முதல்வர் சந்திரசேகரராவ் எதிரொலித்து இருக்கிறார் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார்
ங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியும் பாகிஸ்தானின் குரலை மட்டுமே எதிரொலிக்கிறது என்றும் தேர்தல் வரும்போதெல்லாம் அவர்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்தும், ஹிஜாப் பிரச்சினை குறித்தும் எழுப்புவார்கள் என்றும் பாஜகவின் வளர்ச்சியை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாததால் சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து கேள்வி கேட்கிறார்கள் என்றும் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்