Connect with us

இந்தியா

கோடை விடுமுறையால் திருப்பதியில் நிரம்பி வழியும் பக்தர்கள் கூட்டம்!

Published

on

இந்தியா முழுவதும் பள்ளி கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால், திருப்பதி மலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. திருமலையில் உள்ள வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருக்கும் 30 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி, சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சிலா தோரணம் வரையில் வரிசையில் காத்திருந்தனர்.

திருப்பதியில் பக்தர்கள் கூட்டம்

திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக உள்ளது. மூலவரான ஏழுமலையானை தரிசிப்பதற்கு கிட்டத்தட்ட 30 மணி நேரங்கள் ஆகிறது. ஆகவே பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். கடந்த சில நாட்களாக திருமலையில் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.

தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு நீண்ட தொலைவு மணிக் கணக்கில் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. திருமலையில் இருக்கும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், நாராயணகிரி தோட்டத்தில் இருக்கும் கொட்டகைகள் போன்றவற்றில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. நேற்று அதிகாலை 3 மணியில் இருந்து, அந்திமாலை 5 மணி வரையில் 36,900 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் திருமலையில் 79,207 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 41,427 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தி உள்ளனர். அன்றைய ஒருநாள் உண்டியல் வருமானம் மட்டும் ரூ.3 கோடியே 19 லட்சம் கிடைத்து உள்ளதாக, திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

வணிகம்7 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?