தமிழ்நாடு

அவர் என்ன அண்ணாமலையா? அல்லது திருவண்ணாமலையா? திருநாவுக்கரசர்

Published

on

பாஜக தலைவர் என்ன அண்ணாமலையா? அல்லது திருவண்ணாமலையா? என காங்கிரஸ் பிரமுகர் திருநாவுக்கரசர் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியலை தற்போது கலக்கிக் கொண்டிருப்பவர் அண்ணாமலை என்பது தெரிந்ததே. குறிப்பாக திமுக மீது அவர் கூறும் குற்றச்சாட்டுகள் ஆளுங்கட்சியை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி முதல்வர் குடும்பத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அண்ணாமலைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் பதிலடி கொடுத்து வரும் நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலையா? அல்லது திருவண்ணாமலையா? என்று காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார்.
இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது அண்ணாமலை வேண்டுமென்றே அரசியல் செய்வதற்காக புழுதிவாரி தூற்றுவார் என்றும் அவர் சொல்வது என்ன வேத வாக்கா? என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் மடாதிபதிகள் குறித்து அவர் பேசியபோது மதுரை ஆதீனமாக இருந்தாலும் சரி எந்த ஆதினமாக இருந்தாலும் சரி அவர்களை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் அதே நேரத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் படி யாரும் இருக்கக் கூடாது என்றும் மற்ற மதத்தினரை இழிவுபடுத்தி புண்படுத்தும் விதத்தில் யாரும் பேசக்கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

மடாதிபதிகள் ஆதீனங்கள் என அவரவர்களுக்கு சில அதிகாரங்கள் உள்ளது போல் அரசுக்கும் சில கட்டுப்பாடுகளை விதிக்க உரிமை உள்ளது என்றும் அவர் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.

Trending

Exit mobile version