சினிமா செய்திகள்

நடிகை நயன்தாரா மீது விசாரணை: விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு

Published

on

நடிகை நயன்தாரா மீது விசாரணை நடத்த திருப்பதி திருமலை தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று சென்னை அருகே மகாபலிபுரத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடந்தது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த் ஷாருகான் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திருமணம் முடிந்த மறு நாளான இன்று நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்ஆகிய இருவரும் அதிகாலையில் திருப்பதி சென்றனர் அங்கு அவர்கள் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தனர்.

ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்தபோது நயன்தாரா காலில் காலணி அணிந்து இருந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து நயன்தாரா மீது விசாரணை நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது

Trending

Exit mobile version