Connect with us

சினிமா

‘ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனம் ஆட வேண்டாம் என சொன்னார்கள்’- சமந்தா!

Published

on

நடிகை சமந்தா ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனம் ஆடியது குறித்தும் மனம் திறந்துள்ளார்.

’யசோதா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகை சமந்தா தற்போது ’சாகுந்தலம்’ படத்தின் வெளியீட்டிற்கு காத்திருக்கிறார். 3டியில் உருவாகி இருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கான புரோமோஷனல் பேட்டியில் நடிகை சமந்தா ‘ஓ சொல்றியா’ பாடலுக்கு நடனம் ஆடியது குறித்து பகிர்ந்துள்ளார்.

“’புஷ்பா’ படத்தில் இந்தப் பாடலுக்கான வாய்ப்பு வந்தபோது என் திருமண உறவில் இருந்து வெளியே வர இருந்தேன். அந்த சமயத்தில் இந்த வாய்ப்பு வந்ததால், என் குடும்பத்தில் உள்ளவர்கள், நலன் விரும்பிகள், நண்பர்கள் என அனைவருமே இந்த வாய்ப்பை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தினார்கள். அவர்களே, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் அந்த கதாபாத்திரம் வந்தபோது என்னை ஏற்க சொன்னவர்கள்தான்.

எனக்கு இந்தப் பாடலின் வாய்ப்பை ஏற்றுக் கொள்ள தயக்கம் இருந்தது. ஆனாலும், அல்லு அர்ஜூன் தந்த ஊக்கமும் இந்தப் பாடல் நான் ஒத்துக் கொள்ள ஒரு காரணம். என் திருமண வாழ்வில் என்னால் முடிந்த அளவுக்கு 100 சதவீதம் கொடுத்தேன். அது ஒத்துவரவில்லை எனும்போது வெளியே வந்துவிட்டேன். இதற்காக ஏதோ கொலை குற்றம் செய்தது போல நடத்த வேண்டியதோ, பின்னால் பேசுவதோ தேவை இல்லாதது” என பேசியுள்ளார் சமந்தா.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?