இந்தியா

ஆம்புலன்ஸ் வர மறுப்பு: தாயின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற இளைஞர்!

Published

on

கொரோனா அச்சம் காரணமாக உடல்நிலை குறைவால் உயிரிழந்த பெண்ணின் உடலை ஏற்றி செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முன்வராததால் அந்த பெண்ணின் சடலத்தை அவரது மகனே இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து தனியார் மருத்துவமனையில் இருந்து தனது சொந்த ஊருக்கு உடலை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களை அந்த பெண்ணின் மகன் அழைத்தார். ஆனால் இறந்த பெண்ணுக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தில் சடலத்தை ஏற்றி கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மறுத்துவிட்டார்கள்.

இதனால் நண்பர் ஒருவரின் துணையோடு இறந்த பெண்ணின் மகனே சடலத்தை இருசக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு சென்றார். இருசக்கர வாகனத்தில் சடலம் கொண்டு செல்லப்படுவதை பார்த்தும் போலீசார் கண்டு கொள்ளாமல் அவர்களை அனுப்பி வைத்தார்கள். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending

Exit mobile version