Connect with us

தமிழ்நாடு

பெண்களுடன் உல்லாசமாக இருந்து கொண்டே மாணவியிடம் ஆபாச பேச்சு: சிவசங்கர் பாபா மீதான திடுக்கிடும் ஆதாரம்!

Published

on

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இதனை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சிவசங்கர் பாபாவை அழைத்துகொண்டு சுசில்ஹரி பள்ளியை சோதனை செய்தபோது லேப்டாப் உள்ளிட்ட பல முக்கிய பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதலில் அவர் தனது குற்றத்தை மறுத்ததாகவும், அதன்பின் ஆதாரங்களை காட்டியவுடன் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

சிபிசிஐடி வசம் கிடைத்த ஆதாரங்களில் ஒன்று, சிவசங்கர் பாபா தனது உதவியாளரின் செல்போனிலிருந்து மாணவி ஒருவருக்கு வீடியோ காலில் பேசியுள்ளார். அவர் தனது அறையில் சில பெண்களுடன் நெருக்கமாக உல்லாசமாக இருந்து கொண்டே மாணவியிடம் அந்த வீடியோ காலில் பேசியுள்ளதாகவும், இந்த வீடியோ கால் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்த அந்த மாணவி தனது புகாரை உடன் இணைத்துள்ளதுள்ளதாகவும் இது பெரும் ஆதாரமாக கருதப்படுகிறது என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் முன்கூட்டியே சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரை அதன் பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர். சிவசங்கர் பாபாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதை எடுத்து அவருக்கு அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?