தமிழ்நாடு
பெண்களுடன் உல்லாசமாக இருந்து கொண்டே மாணவியிடம் ஆபாச பேச்சு: சிவசங்கர் பாபா மீதான திடுக்கிடும் ஆதாரம்!
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் என்ற பகுதியில் சுசில்ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்தனர். இதனை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவை அழைத்துகொண்டு சுசில்ஹரி பள்ளியை சோதனை செய்தபோது லேப்டாப் உள்ளிட்ட பல முக்கிய பொருட்கள் கைப்பற்றப்பட்டது. மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முதலில் அவர் தனது குற்றத்தை மறுத்ததாகவும், அதன்பின் ஆதாரங்களை காட்டியவுடன் அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
சிபிசிஐடி வசம் கிடைத்த ஆதாரங்களில் ஒன்று, சிவசங்கர் பாபா தனது உதவியாளரின் செல்போனிலிருந்து மாணவி ஒருவருக்கு வீடியோ காலில் பேசியுள்ளார். அவர் தனது அறையில் சில பெண்களுடன் நெருக்கமாக உல்லாசமாக இருந்து கொண்டே மாணவியிடம் அந்த வீடியோ காலில் பேசியுள்ளதாகவும், இந்த வீடியோ கால் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்த அந்த மாணவி தனது புகாரை உடன் இணைத்துள்ளதுள்ளதாகவும் இது பெரும் ஆதாரமாக கருதப்படுகிறது என்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தகுந்த ஆதாரங்கள் இருப்பதால் முன்கூட்டியே சிவசங்கர் பாபாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர் அவரை அதன் பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர். சிவசங்கர் பாபாவுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதை எடுத்து அவருக்கு அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டு கடுமையான தண்டனை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.