Connect with us

தமிழ்நாடு

மத்திய அரசின் அழுத்தம் தான் மின் கட்டண உயர்வுக்கு காரணம்: அமைச்சர் செந்தில் பாலாஜி!

Published

on

தமிழ்நாட்டில் மின் கட்டணத்தை மாற்றியமைக்கவில்லை எனில் கடன் வழங்கப்படமாட்டாது என்பதன் அழுத்தம் காரணமாகத் தான், மின் கட்டணம் உயர்த்தப்பட்டது என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணம்

தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் மீதான 3 ஆம் நாள் விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் மின்சார கட்டண உயர்வு தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ. தங்கமணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் 84% அளவுக்கு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஒரு கோடி மக்களுக்கு 0% எனும் நிலையில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மின்சார கட்டணத்தை மாற்றியமைக்கவில்லை என்றால் கடன் வழங்கப்படாது என்பதன் அழுத்தம் காரணமாகத் தான், மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. கோடை காலத்தில் எவ்விதமான மின்சார பாதிப்பும் ஏற்படாத வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைகளை எடுத்துள்ளார். மின்சார உற்பத்தியை பெருக்க கட்டமைப்பு வலுப்படுத்தப்பட்டு வருகிறது.

மும்முனை மின்சாரம்

விவசாயிகளுக்கு இப்போது இருக்கும் 18 மணி நேர மும்முனை மின்சாரம், இனி வரும் காலத்தில் 24 மணி நேரமாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்வோம். மலைப் பகுதியில் உள்ள உயர் கம்பிகளை, புதைவட கம்பியாக மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பவானிசாகர் தொகுதியில் உள்ள ஆச்சனூரில் துணை மின் நிலையங்கள் அமைக்க முன்னுரிமை அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சுமார் 316 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு, 89,000 மின் கம்பங்கள் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது எனவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

வணிகம்17 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?