Connect with us

இந்தியா

பாக்கெட்டில் இருந்த செல்போன் திடீரென வெடித்தது: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் வாலிபர்!

Published

on

கேரள மாநிலத்தில் இரயில்வேயில் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வருகிறார் ஹரிஸ் ரகுமான் (வயது 23). எப்போதும் போல கோழிக்கோட்டில் இருக்கும் தனது அலுவலகத்திற்கு பணிக்கு சென்று இருக்கிறார். அந்நேரத்தில், திடீரென அவரது ஜீன்ஸ் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறி உள்ளது.

செல்போன் வெடிப்பு

பாக்கெட்டில் இருந்த செல்போன் வெடித்ததால், ஜீன்ஸ் பேன்டிலும் தீப் பிடித்தது. இருப்பினும், உடனடியாக தீயை ஹரிஷ் ரகுமான் அணைத்து விட்டார். அதிர்ஷ்டவசமாக இந்த செல்போன் விபத்தில், அவருக்கு லேசான தீக்காயங்கள் மட்டுமே ஏற்பட்டது. திடீரென்று வெடித்து சிதறிய அவருடைய செல்போன் 2 வருடங்களுக்கு முன்பு வாங்கப்பட்டது என ரகுமான் தெரிவித்தார். அருகில் இருந்த மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ரகுமான், முதல் கட்ட சிகிச்சைக்கு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

செல்போன் விபத்துகள்

கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக கூட, கேரளாவில் தந்தையின் செல்போனில் கேம்ஸ் விளையாடி கொண்டிருந்த போது திடீரென செல்போன் வெடித்ததால் 8 வயதுடைய சிறுமி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதேபோல், சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையில், செல்போனில் சார்ஜ் செய்து கொண்டே போன் பேசிய இளைஞர், மின்சாரம் தாக்கி கடந்த சில நாட்களுக்கு முன்னர் உயிரிழந்தார். இந்நிலையில், கேரளாவில் மீண்டும் ஒருமுறை செல்போன் வெடித்து விபத்து ஏற்பட்டு இருப்பது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வணிகம்12 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?