Connect with us

தொழில்நுட்பம்

Gmail-ஐ தாக்கும் விஷமிகள்; கூகுள் நிறுவனம் எச்சரிக்கை!

Published

on

உலகின் பெரும்பாலான தனிநபர்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவையாக Gmail உள்ளது. இந்நிலையில் அதன் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட Gmail பயனர்களுக்கு விஷமிகள் ஊடுருவல் குறித்த எச்சரிக்கை தகவலைக் கூகுள் அனுப்பியுள்ளது.

மர்ம விஷமிகள், கூகுள் நிறுவனத்திலிருந்து அனுப்புவது போலவே வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவதாகவும், அதில் கடவுச்சொல்(Gmail Password) உள்ளிட வேண்டும் என்று கேட்கப்படும். அப்போது உன்மை என்ன என்று தெரியாமல் கடவுச்சொல்லை அளித்தால், உங்கள் Gmail தகவல்கள் திருடு போகும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இந்த விஷமிகள் எச்சரிக்கை மின்னஞ்சல் 500 பேருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்கா, கனடா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு இந்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

மேலும் இந்த மின்னஞ்சல் பெற்றவர்களுக்கு கூகுள் உயர் பாதுகாப்பு திட்டம் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. அதில் இணைபவர்களின் Gmail கணக்குகள் மேலும் பாதுகாப்பாக இருக்கும்.

எனவே உங்கள் Gmail-க்கு வரும் தேவையில்லாத மின்னஞ்சல்களை எப்படி தவிர்ப்பது என்று இங்கு பார்ப்போம்.

பாதுகாப்பாக மின்னஞ்சல் சேவையை பெற, தேவையில்லாத மின்னஞ்சல்களை தவிர்க்க மின்னஞ்சல் முகவரிகளை பிளாக் செய்வது(blocking an email address) மற்றும் மின்னஞ்சல்கள் குழுவிலகுவது (Unsubscribe from mass emails) என்று இரண்டு சேவைகள் உள்ளன.

மின்னஞ்சல் முகவர்களை பிளாக் செய்வதன் மூலம் குறிப்பிட்ட முகவரியிலிருந்து எந்த மின்னஞ்சலும் உங்களுக்கு வராமல் தடுக்க முடியும். அடுத்து நாம் சில இணையதளங்களில் பதிவு செய்யும் போது அவர்களது குழு மின்னஞ்சலில் நமது மின்னஞ்சல் முகவரியும் சேர்ந்து இருக்கும். அவர்கள் நமது மின்னஞ்சல் விவரங்களைக் காசுக்காக விற்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே, இப்படி உங்களுக்குத் தேவையில்லாத சேவைகளிலிருந்து வரும் குழு மின்னஞ்சல்களிலிருந்து விலக வேண்டும்.

இவற்றைச் செய்த பிறகும், உங்கள் மின்னஞ்சல் முகவரி தொடர்ந்து விஷமிகளின் தாக்குதலுக்கு உள்ளானால் அது குறித்து சைபர் க்ரைம் காவல் துறையினரிடம் புகார் அளிக்கலாம்,

எப்படி மின்னஞ்சல் முகவரிகளை பிளாக் செய்வது?

படி 1: உங்கள் கணினியில் Gmail கணக்கை திறக்கவும்.
படி 2: உங்களுக்கு வந்த தேவையில்லா மின்னஞ்சலை திறக்கவும்.
படி 3: உங்கள் மின்னஞ்சல் கணக்கின் வலது புறத்துக்கு மேலே உள்ள, மேலும் என்ற பொத்தனை கிளிக் செய்து, Block என்பதை தேர்வு செய்யவும். ஒருவேலை தவறாக பிளாக் செய்துவிட்டால் அவர்களை தேவைப்பட்டால் unblock-ம் செய்துகொள்ளலாம்.

குழுவிலகுவது எப்படி?

படி 1: உங்கள் கணினியில் Gmail கணக்கைத் திறக்கவும்.
படி 2: குலுவிலகுவதற்கான மின்னஞ்சலை திறக்கவும்.
படி 3: பின்னர் அந்த மின்னஞ்சலில் உள்ள Unsubscribe அல்லது Change preferences என்பதை கிளிக் செய்து குழுவிலிருந்து விலகிவிடலாம்.

வணிகம்1 நாள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்1 மாதம் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?