Connect with us

தமிழ்நாடு

இனிமேல் ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வரவேண்டும்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

Published

on

தமிழகத்தில் கடந்த பல மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்ததை அடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டுள்ளன என்பதும் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து விரைவில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி பள்ளிகளில் தற்போது மாணவர் சேர்க்கை நடைபெற்று வருவதால் ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பள்ளிகளுக்கு வரவேண்டும் என்றும் பள்ளி கல்வித்துறை கடந்த சில வாரங்களுக்கு முன் உத்தரவிட்டது.

அதன்படி ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து மாணவர்கள் சேர்க்கை பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் ஆசிரியர்கள் தினந்தோறும் பள்ளிக்கு வருகை தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் விநியோகம், கல்வி தொலைக்காட்சி வழியில் பாடம் பயிலும் மாணவர்களுக்கு தேர்வு நடத்துதல், பள்ளி வளாகங்களை பராமரிப்பு செய்தல் உள்பட பல பணிகள் இருப்பதால் ஆசிரியர்கள் இதுவரை சுழற்சிமுறையில் வந்து கொண்டிருந்த நிலையில் இனிமேல் தினமும் பள்ளிக்கு வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் பிறப்பித்துள்ள இந்த உத்தரவால் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் இது குறித்த முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. ஆசிரியர்களை தினமும் பள்ளிக்கு வர உத்தரவிட்டதை அடுத்து பள்ளிகள் விரைவில் திறப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கருதப்படுகிறது.

வணிகம்4 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?