Connect with us

சினிமா

பெற்றோரைப் பிரிந்து மனைவியுடன் மும்பையில் செட்டில் ஆன சூர்யா?

Published

on

நடிகர் சூர்யா தற்போது மனைவி ஜோதிகாவுடன் மும்பையில் செட்டில் ஆகி இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

’சிறுத்த’ சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ‘சூர்யா 42’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும், இவர் தயாரிப்பாளராக பாலிவுட்டில் நுழைய இருக்கும் ‘சூரரைப்போற்று’ படத்தின் வெளியீடும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ’சூர்யா 42’, ‘வாடிவாசல்’, ‘ஜெய்பீம்’ ஞானவேல் படம், மீண்டும் சுதா கொங்கராவுடன் ஒரு படம், ‘விக்ரம்’ அடுத்த பாகம் என இவரது அடுத்தடுத்தப் படங்கள் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் நடிகர் சூர்யா மும்பையில் ஜோதிகாவுடன் இருக்கும்படியான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. சூர்யா மனைவி ஜோதிகா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டிலாகி விட்டார் எனவும், இதற்காக சுமார் 70 கோடி ரூபாய் செலவில் ஒரு புது வீடு மும்பையில் வாங்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. குழந்தைகளின் மேல்படிப்புக்காக அவர்களை மும்பையில் உள்ள பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள்.

இதுமட்டுமல்லாது, ஜோதிகாவும் தற்போது இந்தி வெப்சீரிஸ்களிலும் படங்களிலும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதன் காரணமாகவே சூர்யா மும்பையில் தனியாக வீடு வாங்கி இருக்கிறார். சென்னையில் கார்த்தி தன் குடும்பத்துடன் தனியாக வசித்து வரும் நிலையில், சூர்யாவும் மும்பையில் இப்போது இருக்கிறார். இதனால், சிவக்குமார்- லட்சுமி தம்பதி சென்னையில் தனியாக தற்போது வசித்து வருகின்றனர். ஆனால், சூர்யா மும்பையில் நிரந்தரமாக அங்கு தங்குவாரா அல்லது தற்காலிகமா என்பது குறித்தானத் தகவல் வெளியாகவில்லை.

 

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?