Connect with us

இந்தியா

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு..!

Published

on

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் குறித்து சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து பங்கு வர்த்தகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதானி குழும நிறுவனங்களுக்கு எதிராக ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை காரணமாக கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை கடும் சர்வில் இருக்கும் நிலையில் இது குறித்து விசாரிக்குமாறு செபிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவில் தெரிவித்துள்ளது. மேலும் விசாரணை முடிவுகளை ஆய்வு செய்ய சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழுவையும் அமைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதானி – ஹிண்டன்பர்க் விவகாரம் இந்திய பங்குச்சந்தை மட்டும் இன்றி சர்வதேச முதலீட்டாளர்களையும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணை செய்ய சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இன்னும் இரண்டு மாதத்தில் அதானி குழும நிறுவனங்களின் நிலைமையை விசாரித்து முடிவுகள் வெளியிட வேண்டும் என்றும் இந்த விசாரணையை உள்நாட்டு முதலீட்டாளர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு முதலீட்டாளர்களும் உற்று நோக்குவார்கள் என்பதால் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும் செபிக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு பெற்றுள்ளது.

மேலும் செபிக்கு 3 முக்கிய உத்தரவையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முதலாவதாக பத்திர ஒப்பந்த ஒழுங்குமுறை விதிமுறைகளின் வரை சரியாக அமைந்துள்ளதா என செபி விசாரிக்க வேண்டும் என்றும் சட்டத்தின் படி செபிக்கு தொடர்புடைய தரப்பினர்களுடன் தொடர்புடைய கட்சிகளுடன் பரிவர்த்தனை மற்றும் பிற தகவல்களையும் வெளியிடுவதில் செபி தோல்வி அடைந்ததா என்பதை விளக்க வேண்டும் என்றும் ஏற்கனவே சட்டங்களுக்கு முரணாக பங்குகளின் விலை கையாளப்பட்டுள்ளதா என்பதை குறித்து செபி ஆய்வு செய்ய வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

அனைத்து பிரிவுகளிலும் விசாரணை செய்ய செபிக்கு உரிமை உண்டு என்றும் விசாரணையை இரண்டு மாதங்களுக்கு முடித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். முதலீட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய செபி சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை உணர்கிறோம் என்றும் பொதுமக்களின் பணம் கடுமையான அச்சுறுத்தலில் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளதால் செபி இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?