Connect with us

தமிழ்நாடு

நாளை முதல் கோடை விடுமுறைத் தொடக்கம்: மகிழ்ச்சியில் மாணவர்கள்!

Published

on

தமிழ்நாட்டில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 மாணவ மாணவிகளுக்கு பொதுத் தேர்வுகள் முடிந்து விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யும் பணி தொடங்கி இருக்கின்றன. வருகின்ற மே 8 ஆம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக இருக்கிறது. 10 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மீதமுள்ள 1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு ஆண்டு இறுதித் தேர்வு அந்தந்த பள்ளிகளில் நடக்கிறது.

கோடை விடுமுறை

பள்ளிக் கல்வித் துறையின் கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டு இருந்தபடி, ஆண்டு இறுதித் தேர்வுகள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்பட்டு வருகின்றன. தனியார் பள்ளிகளை பொறுத்த வரையில், பெரும்பாலான பள்ளிகளுக்கு இறுதித் தேர்வு நடத்தப்பட்டு, ஏற்கனவே கோடை விடுமுறையும் விடப்பட்டு விட்டன. இந்நிலையில் கல்வித் துறை நாட்காட்டியின் படி, வெள்ளிக்கிழமையான இன்று பள்ளிகளுக்கு இறுதி வேலைநாள் ஆகும்.

கடைசி வேலைநாள்

அவ்வகையில் பெரும்பாலான பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு, இன்று ஆண்டு இறுதித் தேர்வின் கடைசித் தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வை எழுதி முடிக்கும் மாணவ மாணவிகளுக்கு, நாளை (சனிக்கிழமை) முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. கோடை விடுமுறை முடிந்து வழக்கம் போல, ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் மீண்டும் பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட உள்ளன. இருப்பினும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் பட்சத்தில், பள்ளிகள் திறப்பு தள்ளிப் போவது குறித்த அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்து வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?