Connect with us

இந்தியா

ஜே.ஈ.ஈ தேர்வுக்கு எதிராக திடீரென கொந்தளித்த மாணவர்கள்.. என்ன காரணம்?

Published

on

ஜே.ஈ.ஈ மெயின் தேர்வு தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்தத் தேர்வு தேதிக்கு எதிராக மாணவர்கள் கொந்தளித்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான என்..ஐ.டி, ஐஐடி, ஐஐஐடி ஆகியவற்றில் சேர்வதற்காக மாணவர்கள் ஜே.ஈ.ஈ என்ற தேர்வை எழுதி வருகிறார்கள் என்பதும் இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அந்த மதிப்பெண்களை வைத்துக்கொண்டு கல்லூரிகளில் சேரலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த தேர்வு தமிழ் உள்பட சுமார் 10 இந்திய மொழிகளில் நடத்தப்படுகிறது என்பதும் ஆங்கிலத்திலும் தேர்வு எழுத வசதி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஜே.ஈ.ஈ தேர்வு தேதி குறித்த அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. டிசம்பர் 16ஆம் தேதி முதல் இந்த தேர்வுக்கான விண்ணப்பம் பதிவு செய்யும் பணி தொடங்கப் பட்ட நிலையில் jeemain.nta.nic.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஜே.ஈ.ஈ தேர்வு முதல் கட்டமாக ஜனவரி 24 முதல் 31 வரை நடைபெறும் என்றும் இடையிலுள்ள குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி மட்டும் தேர்வு நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டது. அதேபோல் இரண்டாவது கட்ட தேர்வு ஏப்ரல் 6, 8, 10, 12 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் இந்த இரண்டு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் மாணவர்கள் எந்த தேர்வில் பெற்றுக் கொள்கிறார்களோ அதன்படி தர வரிசைப்படி கல்லூரி சேர்ந்து கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் முதல் கட்ட தேர்வான ஜனவரி 24 அன்று தொடங்கும் தேர்வு தேதியை தான் மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜனவரி மாதம் தாங்கள் பொதுத் தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருக்கும் நிலையில் ஜே.ஈ.ஈ தேர்வுக்கும் சேர்த்து எங்களால் தயாராக முடியாது என்றும் எனவே ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் மாணவர்கள் கூறி வருகின்றனர்.

சமூக வலைதளங்களில் JEEAfterBoards என்ற ஹேஸ்டேக் இப்போது இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை இதுவரை தேர்வு தேதியை மாற்றுவது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில் இனிமேலாவது தேர்வு தேதியை மாற்றி, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

வணிகம்8 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?