Connect with us

இந்தியா

அதானி, பாஜக குறித்த பேச்சு: ராகுல் காந்திக்கு உரிமை மீறல் நோட்டீஸ்!

Published

on

நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கும், அதானிக்கும் உள்ள விவகாரங்கள் குறித்து பல்வேறு கேள்விகளை முன்வைந்து நேற்று பேசினார். இதற்கு பாஜக நேற்று எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில் தற்போது அவருக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.

#image_title

நேற்று நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் குறித்து பேசிய ராகுல் காந்தி, அதானி குழுமம் தற்போது 8-10 துறைகளில் இயங்கிக்கொண்டிருக்கிறது. கடந்த 2014-இல் வெறும் 8 பில்லியன் டாலராக இருந்த அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு தற்போது 140 பில்லியன் டாலராக எப்படி உயர்ந்தது என இளைஞர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

விமான போக்குவரத்து துறையில் அனுபவம் உள்ள ஒருவருக்கு மட்டுமே விமான நிலையங்களை மேம்படுத்தும் பொறுப்பை வழங்க வேண்டும் என்ற விதியை பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் மாற்றி 6 விமான நிலையங்கள் அதானியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை வைத்து ஜி.வி.கே நிறுவனத்திடம் இருந்து மிகவும் லாபகரமான விமான நிலையமான மும்பை விமான நிலையத்தை அபகரித்து அதானியிடம் கொடுத்துள்ளது மத்திய அரசு.

பிரதமர் மோடிக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பிய அவர், அதானியுடன் எத்தனை முறை ஒன்றாக வெளிநாட்டு பயணம் செய்தீர்கள்? உங்கள் பயணத்தில் எத்தனை முறை அதானி உங்களுடன் இணைந்து கொண்டார்? வெளிநாட்டில் எத்தனை முறை நீங்கள் சந்தித்துக் கொண்டீர்கள்? அதானி எத்தனை வெளிநாட்டு ஒப்பந்தங்கள் எடுத்துள்ளார்? கடந்த 20 ஆண்டுகளில் அதானி பாஜகவுக்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளார் என பல கேள்விகளை எழுப்பினார்.

இந்தியாவின் வெளியுறவு கொள்கையே அதானிக்காக மாற்றப்பட்டது. அதானி குழுமம் டிரோன் தயாரிப்பில் ஈடுபட்டதே இல்லை. ஆனால் மோடி இஸ்ரேல் சென்ற உடனே அதானிக்கு அந்த ஒப்பந்தம் கிடைக்கிறது. ஆஸ்திரேலியா சென்ற உடன் எஸ்பிஐ வங்கி 1 பில்லியன் கடன் வழங்குகிறது. இவ்வாறு ராகுல் காந்தி பல கிடுக்குப்பிடி கேள்விகளை ஆவேசமாக எழுப்ப பாஜக எம்பிக்கள் அவரை பேச விடாமல் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று மக்களவை தொடங்கியதும் ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க வேண்டும் என பாஜக எம்பிக்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாஜக குறித்து ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் எந்தவித ஆதாரமும் இன்றி உண்மைக்கு புறம்பாக கூறிய தவறான குற்றச்சாட்டுகள். எனவே ராகுல் காந்தி பேசியவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்கி, அவருக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் வழங்க வேண்டும் என கூறினார்.

வணிகம்1 மாதம் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு4 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்4 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்4 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?