Connect with us

சினிமா செய்திகள்

‘அண்ணாத்த’ ஒத்திவைப்பு… சூர்யா 39 மீது கவனம் செலுத்தத் தொடங்கிய ‘சிறுத்தை’ சிவா..!

Published

on

இயக்குநர் சிறுத்தை சிவா நடிகர் சூர்யா-வின் 39-வது திரைப் படத்தை இயக்க உள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்த செய்தி தான்.

ஆனால், நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தை நிறைவு செய்த பின்னர் தான் சூர்யா படத்தைத் தொடங்குவதாக இருந்தார் சிறுத்தை சிவா. ஆனால், ரஜினியின் உடல்நிலை காரணத்தாலும் கொரோனா தொற்று பதட்டம் இன்னும் நிலவுவதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தற்போது சூர்யா படத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டாராம் சிவா. விரைவில் நாயகி மற்றும் இதர நடிகர்கள், இசை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இயக்குநர் சிவா முதன் முதலாக நடிகர் கார்த்தியின் சிறுத்தை படத்தின் மூலமாகத் தான் அறிமுகமாகி பிரபலமானார். கார்த்தி உடனான படப்பிடிப்பின் போதே சூர்யா உடன் ஒரு படம் என சூர்யா- சிவா இருவரும் பேசி முடிவு செய்து விட்டனராம். 2011-ம் ஆண்டு எடுத்த முடிவை தற்போது தான் நிகழ்த்த உள்ளனர் இந்தக் கூட்டணியினர். சூர்யா தனது 39-வது படப்பிடிப்புகளின் நடுவிலேயே சூர்யா 40 படத்துக்கான படப்பிடிப்புகளிலும் கலந்து கொள்ள உள்ளாராம்.

சூர்யா 40 திரைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்க உள்ளது.

வணிகம்4 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?