சினிமா செய்திகள்

சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் டி ராஜேந்தர்: சிம்பு அறிக்கை

Published

on

கடந்த சில நாட்களாக இயக்குனர் டி ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல அவரது குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து சிம்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

எனது ஆருயிர் ரசிகர்களுக்கும், அன்பான பத்திரிகை, ஊடக நண்பர்களுக்கும் வணக்கம். எனது தந்தைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கு பரிசோதனையில் அவருக்கு வயிற்றில் இரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் உடல் நலம் கருதியும் சிகிச்சைக்காகவும் தற்போது வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்கிறோம்

அவர் முழு சுயநினைவுடன் நலமாக உள்ளார். கூடிய விரைவில் சிகிச்சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார். உங்கள் பிரார்த்தனைகளுக்கும் அனைவரின் அன்புக்கும் நன்றி’ என்று கூறியுள்ளார்

இந்த அறிக்கையில் டி ராஜேந்தர் எந்த நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்கிற விவரம் இல்லை என்றாலும் சிங்கப்பூர் அல்லது அமெரிக்கா செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version