சினிமா செய்திகள்

ஷிவானி வீட்டின் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட பாலாஜி: வெளுத்து வாங்கும் நெட்டிசன்கள்!

Published

on

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்களில் ஒருவரான ஷிவானி நாராயணன் கிட்டத்தட்ட 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த போதிலும் பெரும்பாலான நாட்கள் பாலாஜி ஆதரவிலேயே விளையாடிதாக கூறப்பட்டது. இருப்பினும் கடைசி நேரத்தில் சிங்கப்பெண்ணாக அவர் வெளியேறி ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றார்.

மேலும் பிக்பாஸ் வீட்டில் ஷிவானியின் தாயார் வருகைக்குப் பின்னர் பாலாஜியிடம் இருந்து ஷிவானி ஒதுங்கி இருந்தார் என்பதும் குறிப்பாக மீண்டும் ரீஎன்ட்ரி ஆன போது பாலாஜியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு ஒரு சில நிகழ்ச்சிகளை தவிர இருவரும் நேரில் சந்தித்து கொண்டதாக தகவல்கள் வெளிவரவில்லை.

இந்த நிலையில் தற்போது ஷிவானி வீட்டின் நாயின் முதல் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து நாயின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சம்யுக்தா, பாலாஜி மற்றும் ஆஜித் ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிகிறது.

ஷிவானியின் நாயின் பிறந்த நாளை அடுத்து கேக் வெட்டி கொண்டாடிய பிக்பாஸ் போட்டியாளர்கள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் இதற்கு நெட்டிசன்கள் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். லட்சக்கணக்கான ஏழைகள் ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் போது நாய்க்கு பிறந்த நாள் கொண்டாடுவது தேவையா? என்றும், அப்படியே கொண்டாடினாலும் அதை அவர்களுக்குள் வைத்துக் கொள்ளலாமே? எதற்காக சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவு செய்து வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்கிறார்கள். இவர்களையெல்லாம் செலிபிரிட்டி ஆக்கிய நம் மீதுதான் தவறு’ என்று நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

Trending

Exit mobile version