Connect with us

இந்தியா

இன்றைய நீதிமன்றச் செய்திகள் – 04.01.2026 கணவர் காணாமல் போனால் மனைவி 2வது திருமணம் செய்யலாமா?

Published

on

கணவர் காணாமல் போனால் மனைவி 2வது திருமணம் செய்யலாமா?

இந்து திருமணச் சட்டம், பிரிவு 11 மற்றும் பிரிவு 13 தொடர்பாக, கணவர் காணாமல் போய் 7 ஆண்டுகள் வரை எந்த தகவலும் இல்லாத நிலையில் மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அந்த திருமணம் சட்டப்படி செல்லுமா? என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. இதற்கு சட்டம் தெளிவான பதிலை வழங்குகிறது.

ஒரு வாழ்க்கைத் துணைவர் உயிரோடு உள்ளாரா அல்லது இல்லையா என்பது குறித்து, மற்றொரு வாழ்க்கை துணைவருக்கு 7 ஆண்டுகளுக்கு மேலாக எந்த தகவலும் இல்லாத நிலை ஏற்பட்டால், அது இந்து திருமணச் சட்டம் பிரிவு 13ன் கீழ் விவாகரத்து பெறுவதற்கான ஒரு காரணமாக மட்டும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், இதனால் திருமண பந்தம் தானாகவே முடிவடைந்துவிடும் என்று சட்டம் எங்கும் கூறவில்லை.

7 ஆண்டுகள் வரை கணவர் அல்லது மனைவி குறித்து எந்த தகவலும் இல்லை என்பதற்காக மட்டும், நீதிமன்ற விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்வது சட்டப்படி பாதுகாப்பானது அல்ல. அத்தகைய இரண்டாவது திருமண உறவில், எதிர்காலத்தில் பல சட்ட சிக்கல்கள் உருவாகும் வாய்ப்பு உள்ளது.

இந்தச் சூழலில் இந்திய சாட்சியச் சட்டம், 1872 – பிரிவு 108 முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒருவரை “7 ஆண்டுகளாக காணவில்லை, அவர் உயிரோடு உள்ளாரா என்பது தெரியவில்லை” என்று கூறுகிற நபரே, முதலில் அந்த உண்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதன் பின்னரே, அந்த நபர் அந்த காலகட்டத்தில் உயிருடன் இருந்தார் என்பதை நிரூபிக்கும் பொறுப்பு காணாமல் போன வாழ்க்கைத் துணைவருக்கு அல்லது அவரை சார்ந்தவர்களுக்கு ஏற்படும்.

ஆனால், இந்திய சாட்சியச் சட்டத்தின் இந்த ஊகம் (presumption) திருமண பந்தத்தை தானாக ரத்து செய்வதில்லை. எனவே, 7 ஆண்டுகள் காணாமல் போயுள்ளார் என்ற காரணத்தால் மட்டும், சட்டப்படி விவாகரத்து பெறாமல் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறுவதை ஏற்க முடியாது.

எனவே, கணவர் அல்லது மனைவி 7 ஆண்டுகளாக காணாமல் போயிருந்தால், இரண்டாவது திருமணம் செய்ய முன், அந்த காணாமல் போன விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவித்து, தகுதி வாய்ந்த நீதிமன்றத்தின் மூலம் விவாகரத்து பெற்றிருக்க வேண்டும். அப்படி நீதிமன்ற உத்தரவு இல்லாமல் செய்யப்படும் இரண்டாவது திருமணம் சட்டப்படி செல்லாது.

இந்தக் கோட்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் Punjab and Haryana High Court தனது தீர்ப்பில், வாழ்க்கைத் துணைவர் 7 ஆண்டுகளாக காணாமல் போயுள்ளார் என்ற காரணத்தால் மட்டும், நீதிமன்ற விவாகரத்து இல்லாமல் செய்யப்பட்ட 2வது திருமணம் சட்டப்படி செல்லாது” என தெளிவாக கூறியுள்ளது.

(வழக்குகள்: F.A.O. No.246-M/2009 & F.A.O. No.309-M/2003, நாள்: 03.08.2015 – சவர்ன்ஜித் கவுர் Vs Lt. Col. அவதார் சிங் & பிறர், 2016-2-DMC-478)

மொத்தமாகப் பார்க்கும்போது, 7 ஆண்டுகள் தகவல் இல்லாமை என்பது விவாகரத்து பெறுவதற்கான காரணமே தவிர, இரண்டாவது திருமணம் செய்யும் அனுமதி அல்ல. சட்டப்படி பாதுகாப்பான நடைமுறை என்னவென்றால், முதலில் நீதிமன்ற விவாகரத்து பெற்று, அதன் பிறகே இரண்டாவது திருமணம் செய்வதே ஆகும்.

 

 

Janakiraman is a seasoned writer with expertise in politics and health, offering in-depth analysis and insightful perspectives shaped by years of research and observation. A B.Sc. Mathematics gold medalist, his analytical background enhances his ability to interpret complex issues with clarity and precision. Known for blending data-driven insight with real-world relevance, Janakiraman brings credibility and nuance to every topic he explores.

Uncategorized4 மணி நேரங்கள் ago

வடிவம் மாறும் கல்வி முறைகள் மற்றும் வேலை வாய்ப்புக்கள் – பரிணாம வளர்ச்சியின் கட்டாயம்.

இந்தியா6 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 07.03.2026

தினபலன்6 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன் – 07.03.2026

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.03.2026

ஆன்மீகம்1 நாள் ago

1 வருடத்திற்கு பின் மீன ராசியில் சூரியன் பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 3 ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!

செய்திகள்1 நாள் ago

‘தமிழ்நாடு 2030’ வளர்ச்சி திட்டம்: 14 முக்கிய அம்சங்களை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் – டிரில்லியன் டாலர் பொருளாதாரம் இலக்கு!

ஆன்மீகம்1 நாள் ago

இந்த 4 ராசிகளில் பிறந்த பெண்கள் ஆண்களிடம் கடுமையாக நடந்து கொள்வார்களாம்… உங்கள் ராசி இதில் உள்ளதா?

ஆன்மீகம்1 நாள் ago

சுக்கிரன் மீன ராசிக்கு பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!

வணிகம்1 நாள் ago

8வது ஊதியக்குழு 2026: மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் இரட்டிப்பாகுமா? நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆன்மீகம்1 நாள் ago

கும்ப ராசியில் சக்திவாய்ந்த கிரகச் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்கள் ஏப்ரல் 11 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (01/03/2026)!

வணிகம்6 நாட்கள் ago

US–Israel–Iran போர் பதற்றம் எதிரொலி – தங்க விலை திடீர் உயர்வு, வெள்ளி விலை நிலை

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: 50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்க கோரிக்கை – மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் நிவாரணமா?

வணிகம்6 நாட்கள் ago

15 ஆண்டுகள் பணியாற்றிய பின் பணி நீக்கம்: இந்திய டெக்கி கற்றுக்கொண்ட 12 கடினமான வாழ்க்கை பாடங்கள்

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தினமும் பிளாக் காபி குடிப்பதின் மறைமுக பக்கவிளைவுகள் என்ன? – கவனிக்க வேண்டிய சிக்னல்கள்

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: மத்திய அரசு ஊழியர்களுக்கு 5 பதவி உயர்வுகள் உறுதியா? பெரிய முடிவுகள் விரைவில்!

கிரிக்கெட்6 நாட்கள் ago

2026 டி20 உலக கோப்பை: அரையிறுதிக்கான வாழ்வா–சாவா போர் இன்று! வெஸ்ட் இண்டீஸை கட்டாயம் வெல்ல வேண்டிய அழுத்தத்தில் இந்தியா!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஒரு ஆண்டு முழுவதும் சைவமாக மாறிய ரன்பீர் கபூர் ஃபிட்னஸ் ரகசியம்!

ஆன்மீகம்6 நாட்கள் ago

தெய்வமே என்றாலும் செய்த தவறுக்கு தண்டனை உண்டு!

ஆன்மீகம்6 நாட்கள் ago

2026 சிம்ம ராசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், தொழில் மற்றும் பணவரவில் பெரிய முன்னேற்றம்!

Translate »
Komplet løsning til service virksomheder. Oplev anden verdenskrig fra en rib båd og hør fra historikere om, hvordan krigen udspillede sig i og omkring aarhus bugt. Bliv medlem af borgernes parti.