தமிழ்நாடு
சீமான் ஒரு பாலியல் குற்றவாளி, அவர் இருக்க வேண்டிய இடம் சிறை: ஜோதிமணி எம்பி
சீமான் ஒரு பாலியல் குற்றவாளி என்றும் அவர் இருக்க வேண்டிய இடம் சிறை என்றும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நேற்று முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட தினத்தை அடுத்து காங்கிரஸ் பிரமுகர்கள் அவரது சமாதியில் மாலை மரியாதை செய்தனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் ’ராஜீவ் காந்தி என்ன பெரிய தியாகி என்றும் அவர் 400 கோடி ரூபாய் பீரங்கி ஊழலில் சம்பந்தப் பட்டவர் என்றும் எங்கள் இனத்தை ராஜீவ்காந்தி இராணுவத்தை அனுப்பி அழித்தார் என்றும் அவர் கூறினார்
இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஜோதிமணி எம்பி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
‘சீமான் ஒரு பாலியல் குற்றவாளி.சட்டம் சரியாக செயல்பட்டிருக்குமானால் சீமான் இந்நேரம் இருந்திருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை. சீமானுக்கெல்லாம் இந்தியாவின் இளைய பிரதமர்,தொழில்நுட்ப இந்தியாவின் தந்தை, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் நாயாகன்,தலைவர் ராஜீவ்காந்தியை விமர்சிக்கின்ற அருகதை கிடையாது’