Connect with us

இந்தியா

ஆரம்பித்த இடத்திலேயே முடிந்தது.. கண்ணீருடன் விடை பெற்றார் சானியா மிர்சா

Published

on

இந்தியாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா இன்று நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓப்பன் டெனிஸ் கலப்பு இரட்டையர் இறுதி போட்டியில் தோல்வி அடைந்ததை அடுத்து கண்ணீருடன் விடை பெற்றார்.

சானியா மிர்சா போபண்ணா ஜோடி ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியில் பிரேசில் ஜோடிக்கு எதிராக மோதினார்கள்., இந்த போட்டியில் சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்றால் ஓய்வு பெறுவதற்கு முன் விளையாடும் கடைசி போட்டியின் கிராண்ட்ஸ்லாம் பட்டம் அவருக்கு இருந்திருக்கும். ஆனால் இந்த போட்டியில் நேர் செட்களில் சானியா மிர்சா ஜோடி தோல்வி அடைந்ததை அடுத்து அவர் கண்ணீருடன் விடைபெற்றார்.

கடந்த 2005 ஆம் ஆண்டு தான் 18 வயதாக இருக்கும்போது இதே மெல்போர்ன் மைதானத்தில் தான் எனது முதல் போட்டியை செரினா வில்லியம்ஸ்க்கு எதிராக விளையாடினேன், இப்போது இதே மைதானத்தில் நான் எனது கடைசி போட்டியையும் முடித்துக் கொள்கிறேன் என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.

மேலும் அவர் தன்னுடைய டென்னிஸ் வாழ்க்கையை குறித்து கூறிக் கொண்டிருக்கும்போது அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. கண்ணீருடன் அவர் சில நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மீண்டும் மீண்டும் மெல்போர்ன் மைதானத்தில் சில போட்டிகளில் வெற்றி பெற்று உங்கள் அனைவர் இடையே சிறப்பாக விளையாடி இறுதி போட்டி வரை வரும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது உண்மையிலேயே மகிழ்ச்சி தான் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் நான் எனது கடைசி போட்டியில் என் மகன் பார்வையாளராக இருக்கும் நிலையில் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை என்றும் இந்த மைதானத்தில் நான் எப்போது விளையாட்டினாலும் சொந்த ஊரில் விளையாடுவது போல் இருக்கும் என்றும் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி என்றும் தெரிவித்தார்.

டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு வரப்போவதாக கடந்த சில நாட்களுக்கு முன்னால் சானியா மிர்சா அறிவித்திருந்த நிலையில் அவர் கடைசியாக ஓய்வு பெறுவதர்கு முன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அவரது தோல்வி ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள்2 hours ago

தொடங்கப்படாத தனுஷ் படம்; அதற்குள் நீக்கப்பட்ட நடிகர்!

கிரிக்கெட்3 hours ago

ஐபிஎல் 2023: 7 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி பஞ்சாப் வெற்றி!

Rajinikanth
சினிமா செய்திகள்3 hours ago

‘செம தலைவா’ மகள் சொன்ன கமெண்ட்; மகிழ்ச்சியை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்!

Kamal Haasan flew to Taiwan; Viral photo!
சினிமா செய்திகள்4 hours ago

தைவான் பறந்த கமல்ஹாசன்; வைரலாகும் புகைப்படம்!

சினிமா6 hours ago

திட்டமிட்டபடி வெளியாகும் ‘ஜவான்’!

தமிழ்நாடு7 hours ago

சுங்கக் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்: அன்புமணி ராமதாஸ்!

Uncategorized8 hours ago

தமிழகத்தில் உள்ள குடும்பங்களுக்கு அதிவேக இணைய சேவை: அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!

தமிழ்நாடு10 hours ago

தமிழகத்தில் 8 புதிய மாவட்டங்கள்: சட்டசபையில் அமைச்சர் தகவல்!

இந்தியா12 hours ago

அடுத்த அவதூறு வழக்கில் சிக்கிய ராகுல் காந்தி: பாட்னா நீதிமன்றம் சம்மன்!

தமிழ்நாடு12 hours ago

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா… காலம் தாழ்த்தும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்!

வேலைவாய்ப்பு3 days ago

CECRI காரைக்குடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

EPFO-ல் வேலைவாய்ப்பு! மொத்த காலியிடங்கள் 2859

வேலைவாய்ப்பு3 days ago

ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.40,000/- ஊதியத்தில் DRDO ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

டிகிரி முடிவர்களுக்கு UIDAI நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.75,000/- ஊதியத்தில் Airports Authority of India-வில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு4 days ago

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட்டில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு2 days ago

ரூ.2,24,200/- சம்பளத்தில் சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு3 days ago

ரூ.1,12,400/- ஊதியத்தில் தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!