சினிமா செய்திகள்

‘சாகுந்தலம்’ எப்போதுமே எனக்குப் பிடித்தப் படம்..சமந்தா நெகிழ்ச்சி!

Published

on

‘சாகுந்தலம்’ திரைப்படம் தனக்கு நெருக்கமான படம் என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

நடிகை சமந்தா தற்போது தெலுங்கு மற்றும் வெப் சீரிஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். நடிகை சமந்தா தற்போது மையோசிடிஸ் எனப்படக்கூடிய தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையில் உள்ளார்.

தற்போது, மீண்டும் படங்களில் நடிக்கத் தீவிரமாக நடித்து வருகிறார். இப்போது, சமந்தாவின் அடுத்தப் படமான ‘சாகுந்தலம்’ அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாக இருக்கிறது.

தேவ்மோகன் கதாநாயகனாக நடித்திருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பான் இந்தியா படமாக 3டியில் வெளியாக இருக்கிறது. இதற்கான புரோமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. சமந்தாவும் இதில் பங்கேற்று வருகிறது. இந்தப் படத்தைப் பார்த்துள்ள சமந்தா படக்குழுவுடன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, ‘சாகுந்தலம்’ படத்தைப் பார்த்து விட்டேன். இயக்குநர் குணசேகர் சார் அற்புதமாக இந்தக் கதையை படமாக்கியுள்ளார்.

என்ன ஒரு அழகான படம் இது! இதுபோன்ற உணர்ச்சிகள் நிறைந்தப் படத்தை பார்வையாளர்கள் குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் பார்த்து ரசிக்க வேண்டும். இது போன்றதொரு மேஜிக்கலான உலகத்தை நிச்சயம் நீங்கள் விரும்புவீர்கள்.

இந்த அற்புதமான பயணத்தில் உடன் நின்ற தயாரிப்பாளர் தில் ராஜூ சார் மற்றும் நீலிமாவுக்கு நன்றி. ’சாகுந்தலம்’ படம் எப்போதுமே என் மனதிற்கு நெருக்கமானது’ எனக் கூறியுள்ளார் சமந்தா.

Trending

Exit mobile version