Connect with us

சினிமா செய்திகள்

விவாகரத்து போஸ்ட்டை நீக்கிய சமந்தா: மீண்டும் கணவருடன் இணைகிறாரா?

Published

on

நடிகை சமந்தா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்யப்போவதாக ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அறிவித்திருந்த நிலையில் அந்த போஸ்ட்களை தற்போது திடீரென நீக்கியுள்ளது ரசிகர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

நடிகை சமந்தா மற்றும் நாகசைதன்யா ஆகிய இருவரும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்த நிலையில் இருவரும் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக சமூக வலைதளங்களில் அறிவித்தனர். இதனால் இரு தரப்பு ரசிகர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 200 கோடி ரூபாய் சமந்தாவுக்கு ஜீவனாம்சம் தரப் போவதாகவும் நாகசைதன்யா வேறு ஒருவரை திருமணம் செய்ய போவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் திடீரென சமந்தா தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக கூறியிருந்த போஸ்ட்டை ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இருந்து நீக்கியுள்ளனர். ஆனால் அதே நேரத்தில் நாக சைதன்யாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த பதிவு இன்னும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விவாகரத்து போஸ்ட்டை சமந்தா நீக்கி உள்ளதால் மீண்டும் அவர் தனது கணவருடன் இணையப் போகிறாரா? என்ற கேள்வி ரசிகர் மத்தியில் எழுந்துள்ளது. சமந்தா தனது கணவருடன் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகிய இருவரும் விவாகரத்து செய்யப் போவதாக சமூக வலைதளங்களில் அறிவித்திருந்த போதிலும் இன்னும் நீதிமன்றத்தில் முறையாக விவாகரத்து வழக்கை பதிவு செய்யவில்லை என்பதால் மீண்டும் இருவரும் இணைய அதிக வாய்ப்பு இருப்பதாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

வணிகம்20 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?