சினிமா செய்திகள்
100% ஒற்றுமையான தம்பதி உலகில் யாருமே இல்லை: தனுஷ்-ஐஸ்வர்யாவுக்கு எஸ்.ஏ.சி அறிவுரை
Published
1 year agoon
By
Shiva
100% ஒற்றுமையாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழும் தம்பதிகள் உலகில் யாருமே இல்லை என்றும் அதனை மனதில் வைத்து கருத்து வேறுபாடுகளை மறந்து ஒற்றுமையுடன் வாழவேண்டும் என்றும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிக்கு விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏசந்திரசேகர் அறிவுரை கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வீடியோ ஒன்றில் கூறியபோது, ‘இன்று காலை நான் கேள்விப்பட்ட விஷயம் பொய்யாக இருக்க வேண்டும் அல்லது கனவாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
கணவன் மனைவி என்றால் பிரச்சினைகள் வரத்தான் செய்யும். 100% ஒற்றுமையாக இந்த உலகில் யாருமே வாழ முடியாது. பிரச்சினைகளை சந்தித்து வாழவேண்டும். பிரச்சனைகளே இல்லை என்றால் அது வாழ்க்கையே இல்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் ஒரு பொருளை எங்கு தொலைத்தோமோ, அங்கு தான் தேட வேண்டும். திநகரில் பர்ஸை தொலைத்துவிட்டு திருவல்லிக்கேணியில் தேடக்கூடாது என்றும் அதுபோல் பிரச்சனை எங்கு இருக்கிறதோ அங்கு போய் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார். தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தம்பதிக்கு எஸ்.ஏ சந்திரசேகர் கூறிய அறிவுரையின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
You may like
-
காலேஜ் படிக்கும் போது 70 சிகரெட்.. இயக்குநர் ஆனதும் 150 சிகரெட்.. வெற்றிமாறன் பேச்சு!
-
அப்போ செல்வராகவன் போட்ட பதிவு கன்ஃபார்ம் தானா? கீதாஞ்சலி இப்படியொரு போஸ்ட் போட்டுருக்காரே!
-
தனுஷ் தம்பிக்கு எனது நன்றி: பார்த்திபன் நெகிழ்ச்சி டுவிட்!
-
தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு: அதே தேதியில் சிம்பு படம் ரிலீஸா?
-
‘தி க்ரே மேன்’ டிரைலர் ரிலீஸ்: தனுஷை சல்லடை போட்டு தேடும் ரசிகர்கள்
-
தனுஷூக்கு மீண்டும் குடைச்சல் கொடுக்கும் மதுரை தம்பதிகள்: பின்னணியில் ரஜினியா?