கிரிக்கெட்
முதல் ஓவரிலேயே விக்கெட்: ஆனாலும் வெளுத்து கட்டும் இஷான் கிஷான்!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
சமீபத்தில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 211 ரன்கள் எடுத்த போதிலும் 212 என்ற இலக்கை இலக்கை 19.1 ஓவர்களில் அடித்து வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இன்று இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் கட்டாக் நகரில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் முதலில் பந்து வீச முடிவு செய்ததை அடுத்து இந்திய அணி களத்தில் இறங்கியது.
இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான ருத்ராஜ் ஐந்தாவது பந்தில் ஒரு ரன் மட்டுமே எடுத்து அவுட்டானார். இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் அதே நேரத்தில் இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் அடித்து ஆடி வருகின்றனர்
சற்றுமுன் வரை இஷான் கிஷான் 18 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 29 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 41 ரன்கள் எடுத்துள்ளது. இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தான் 1-1 என்ற கணக்கில் சமம் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.