சினிமா செய்திகள்

சூர்யா 42’ படத்தின் நாயகி இவரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

Published

on

பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 41 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் பிரச்சனை என்று கூறிய நிலையில் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குவதாக கூறி அனைத்து வதந்திகளுக்கும் சூர்யா முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்த நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க சூர்யா முடிவு செய்திருக்கிறார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாகவும் இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றும் கூறப்பட்டது.

poojaஇந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் பூஜா ஒப்புக்கொண்டால் உடனடியாக படப்பிடிப்பைத் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

விஜய் நடித்த பீஸ்ட் நடித்த பூஜா ஹெக்டே, சூர்யாவின் படத்திலும் நடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Trending

Exit mobile version