தமிழ்நாடு

கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் தடை… புதுச்சேரியில் அலைமோதும் கூட்டம்!

Published

on

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் கடுமையான தடைகள் நிலவுவதால் பாண்டிச்சேரி நோக்கி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.

சென்னையில் பீச், பப் என மக்கள் புத்தாண்டுக்கு அதிகம் கூடும் பகுதிகளில் எல்லாம் கடுமையான தடைகள் அமல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், புதுச்சேரியில் பெரிய கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. இதனால் சென்னை மக்கள் பெரும்பாலானோர் புதுச்சேரி நோக்கி அலைமோது வருகின்றனர்.

புதுச்சேரி கடற்கரை ஓர பகுதிகளில் மக்கள் கொண்டாட்டங்கள் இருக்கும் என்பதால் அங்கு வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளைப் பின்பற்ற பல கட்ட அரண்கள் அமைக்கப்பட்டு அதிகப்படியான போலீஸார் காவலுக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். கடற்கரை பகுதி முழுவதும் 20 மீட்டர் தூர தொலைவுக்கு ஒரு கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்ட விதிமுறைகள் மற்றும் ஏற்பாடுகளை இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி முழு வீச்சில் ஆய்வு செய்தார்.

Trending

Exit mobile version