தமிழ்நாடு

கைது நடவடிக்கை வேண்டாம், நீதிமன்றத்தில் ஆஜராகிய நடிகை யாஷிகா ஆனந்த்!

Published

on

கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பியும் நடிகை யாஷிகா ஆனந்த் ஆஜராகாததால் அவருக்கு எதிராக செங்கல்பட்டு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்த நிலையில் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார் யாஷிகா.

#image_title

இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் பிரபல தனியார் தொலைக்காட்சி சார்பில் நடத்தப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலம் அடைந்தர். யாஷிகா கடந்த 2021- ஆம் ஆண்டு பாண்டிச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது மாமல்லபுரம் அருகே கார் விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் யாஷிகாவின் நண்பர் வள்ளி பவானி செட்டி என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் கடந்த 21-ஆம் தேதி யாஷிகா நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் யாஷிகா நேரில் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து வருகிற ஏப்ரல் 25-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் ஆஜராகாவிட்டால் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் யாஷிகா நேரில் ஆஜராகி தனது பிடிவாரண்ட்டை ரத்து செய்ய கோரிக்கை வைத்தார். இதனையடுத்து யாஷிகா ஆனந்த் மீதான பிடிவாரண்டை செங்கல்பட்டு நீதிமன்றம் தளர்த்தியுள்ளது. மேலும் அடுத்த மாதம் 25-ஆம் தேதி மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

Trending

Exit mobile version