Connect with us

தமிழ்நாடு

4 மணி நேரமாக காத்திருக்கிறேன், வெற்றி அறிவிப்பு தாமதம் ஏன்? விஜயபாஸ்கர்

Published

on

நான்குமணி நேரமாக வெற்றி அறிவிப்புக்காக காத்திருக்கிறேன் என்றும் ஆனால் இன்னும் எனது வெற்றி குறித்த அறிவிப்பு வெளிவரவில்லை என்றும் இந்த தாமதம் ஏன் என்றும் சி.விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்

விஜய பாஸ்கர் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார் என்ற நிலையில் அவரது வெற்றி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த தொகுதியின் முடிவை இன்னும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் விராலிமலை தொகுதியில் எனது வெற்றியை அறிவிப்பதில் தாமதம் என்றும் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 24 மணி நேரத்தை கடந்து விட்டது என்றும் விஜயபாஸ்கர் ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் 23 சுற்று முடிந்து விட்டது என்றும் 4 மணி நேரமாக வெற்றி அறிவிப்புக்காக காத்திருக்கிறோம் என்றும் அவர் தனது விரக்தியை வெளியிட்டுள்ளார். விராலிமலை தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி 23 சுற்றுகள் முடிந்து விட்டது என்பதும் இருப்பினும் முடிவை இன்னும் அறிவிக்காமல் இருக்கும் தேர்தல் ஆணையம் இன்னும் ஒரு சில மணி நேரத்தில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விராலிமலை தொகுதியில் விஜயபாஸ்கர் 71,831 வாக்குகளும், திமுகவின் பழனியப்பன் 53,175 வாக்குகளும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?