தமிழ்நாடு
தைலாபுரத்தில் நடந்த விருந்தின் பின்னணி?: கருணாஸ் பரபரப்பு பேட்டி!
தமிழகத்தில் வரும் மக்களவை தேர்தலை சந்திக்க அதிமுக, பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடம் கூட்டணி வைத்துள்ளது. இதில் அதிமுக, பாமக கூட்டணி மிகவும் அதிகமாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் பாமக சார்பில் தைலாபுரத்தில் அதிமுக தலைவர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு விருந்து அளிக்கப்பட்டது.
இது குறித்து தற்போது சந்தேகத்தை எழுப்பியுள்ளார் முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ். இது தொடர்பாக புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக இரண்டாக உடைந்ததால் தினகரன் பெரும்பாலான ஓட்டுக்களை நாடாளுமன்றத் தேர்தலில் பிரிப்பார். இது திமுகவுக்கு சாதகமாகவும், அதிமுகவுக்கு பாதகமாகவும் அமையும்.
கழகங்கள் இல்லாத தமிழகம் என்று கூறிய பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன? தமிழக அரசு அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து ஆளுநரிடம் மனு அளித்த பாமக, அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க வேண்டிய அவசியம் என்ன? தைலாபுரத்தில் நடந்த விருந்தின் பின்னணி என்ன? என கேள்வி எழுப்பினார்.
மேலும், சந்தர்ப்பததிற்கு ஒரு வேலையை செய்துவிட்டு அதை தமிழ் சமூகத்திற்கு தான் செய்கிறோம் என்று கூறும் பாமகவின் ஏமாற்று அரசியல் இனி மக்களிடம் எடுபடாது என விளாசினார் கருணாஸ்.