Connect with us

தமிழ்நாடு

இன்று மே 1 விடுமுறை தினம்: மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்குமா?

Published

on

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே வருகிறது. நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 19 ஆயிரத்தை நெருங்கி விட்டது என்பதும் சென்னையில் 6,000ஐ விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக மின்சார ரயில்கள் இயக்கும் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. ஒவ்வொரு நாளும் 600 மின்சார ரயில்கள் இயங்கிக் கொண்டிருந்த நிலையில் வார நாட்களில் 480 மின்சார ரயிலும் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மட்டும் 100 மின்சார ரயிலும் இயக்கப்பட்டு வந்தன. அதேபோல் அரசு விடுமுறை நாட்களிலும் ஞாயிற்றுக் கிழமை இயக்கும் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் மின்சார ரயில்கள் இயங்கி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று மே தினம் விடுமுறை என்பதால் விடுமுறை நாட்களில் இயக்கப்படும் 100க்கும் குறைவான மின்சார ரயில்கள் மட்டுமே இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்ட முதலில் அறிவித்து இருந்தது. ஆனால் அத்தியாவசிய பணியாளர்கள் மற்றும் ரயில் பயணிகள் சங்கத்தினர் இன்றைய தினம் அதிக ரயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையின் அடிப்படையில் இன்று மே தினம் வழக்கம்போல் வார நாட்களில் இயங்கும் 480 ரயில்கள் இயக்கப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இருப்பினும் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே ரயில்களில் பயணம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வணிகம்3 வாரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்2 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி2 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்3 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?