செய்திகள்
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு போக்குவரத்து அனுமதி.. தமிழக அரசு அனுமதி….
தமிழக அரசு ஏற்கனவே ஆகஸ்டு 23ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. அது முடிய இன்னும் 2 நாட்களே இருந்த நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி. 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி, கடற்கரையில் பொதுமக்கள் அனுமதி, மழலையர் காப்பகங்கள் இயங்க அனுமதி. நீச்சல் குளங்கள் 50 % பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி மற்றும் மதுபான கூடங்கள்(பார்) செயல்பட அனுமதி என முக்கிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த 6 மாதங்களாகவே சொந்த மற்றும் வியாபார விஷயமாக தமிழகத்திலிருந்து மற்ற மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் பலரும் தவித்து வந்தனர். தற்போது இந்த அறிவிப்பு அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம், கேரள மாநிலத்திற்கு போக்குவரத்து அனுமதி அளிக்கப்படவில்லை. ஏனெனில், அங்கு கொரோனா தொற்று மிகவும் அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.