Connect with us

செய்திகள்

பார்கள் திறக்க அனுமதி…தமிழக அரசு அறிவிப்பு….குடிமகன்கள் மகிழ்ச்சி…

Published

on

bar

தமிழக அரசு ஏற்கனவே ஆகஸ்டு 23ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது. அது முடிய இன்னும் 2 நாட்களே இருந்த நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று காலை தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முக்கிய தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் 1ம் தேதி முதல் 9,10,11,12 ஆம் வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி. 50 சதவீத பார்வையாளர்களுடன் திரையரங்குகள் திறக்க அனுமதி, கடற்கரையில் பொதுமக்கள் அனுமதி, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு அனுமதி, மழலையர் காப்பகங்கள் இயங்க அனுமதி. நீச்சல் குளங்கள் 50 % பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதி என முக்கிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

tasmac

மேலும், மதுப்பிரியர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த மதுபான கூடம் எனப்படும் பார்கள் வருகிற 23 ம் தேதி செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது டாஸ்மாக் கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால், மதுப்பிரியர்கள் அதை அருந்த இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். பலரும் டாஸ்மாக் கடையின் அருகிலேயே ஓரமாய் நின்று குடித்து வருகின்றனர். அதேபோல், தனியார் பார்களும் செயல்படாமல் இருந்தது. தற்போது பாருக்கு அனுமதி அளித்திருப்பது குடிமகன்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

வணிகம்5 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?