தமிழ்நாடு
பாஜகவில் இணைந்தார் திருநள்ளாறு அமமுக வேட்பாளர்: அதிர்ச்சியில் தினகரன்!
தேர்தல் நேரத்தில் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது என்பது சர்வசாதாரணமாக நடைபெற்று வரும் நிகழ்வுகளாக இருக்கிறது. ஆனால் ஒரு கட்சியின் வேட்பாளரே திடீரென தேர்தலுக்கு முன் இன்னொரு கட்சிக்கு தாவுவது என்பது மிகவும் அரிதான அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும்.
அந்த வகையில் தற்போது வந்துள்ள தகவலின்படி திருநள்ளாறு மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ஒருவர் திடீரென பாஜகவுக்கு தாவி உள்ளதாக வந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தனது வேட்பாளர்களை அறிவித்த நிலையில் அந்த அறிவிப்பில் திருநள்ளாறு தொகுதிக்கு தர்பாண்யம் என்பவர் போட்டியிடுவதாக அறிவித்து இருந்தார். இவர் தனது பகுதியில் மிக தீவிரமாக பணி செய்து கொண்டிருந்த நிலையில் திடீரென இன்று பாஜகவில் இணைந்தார்.
இன்று தமிழகம் வந்த மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மற்றும் அர்ஜூன் ராம்மேக்வால் ஆகியோர் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார் என்பதும், பாஜகவின் உறுப்பினர் அட்டையை பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சனீஸ்வரன் திருநள்ளாறு தொகுதியிலேயே தனது வேட்பாளர் ஒருவர் மாறி இருப்பது டிடிவி தினகரனுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.