Connect with us

உலகம்

சூயஸ் கால்வாயில் தரைதட்டி நின்ற கப்பல் மீட்பு: நிம்ம்தி பெருமூச்சில் உலக நாடுகள்

Published

on

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூயஸ் கால்வாயில் எவர்கிரீன் என்ற கப்பல் சிக்கிக் கொண்ட நிலையில் தொழில்நுட்ப வல்லுனர்களின் தீவிர முயற்சியால் ஆறு நாட்களுக்குப் பின்னர் தற்போது அந்த கப்பல் மீட்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா மற்றும் ஆசியா கண்டங்களை இணைக்கும் சூயஸ் கால்வாயில் தினந்தோறும் பல கப்பல்கள் சென்று வருகிறது. இந்த கால்வாய் காரணமாக ஆப்பிரிக்காவைச் சுற்றி வரும் நேரம் எரிபொருள், பணம் மிச்சமாகிறது என்பதால் இந்த கால்வாயை பெரும்பாலான கப்பல்கள் பயன்படுத்தி வருகின்றன.

இந்த கால்வாய் மூலம் சூயஸ் கால்வாய் நிர்வாகத்திற்கு தினமும் கோடிக்கணக்கில் வருமானம் வருகிறது என்பதும் அது மட்டுமின்றி உலக வர்த்தகத்தில் 12% இந்த கால்வாய் வழியாக தான் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 400 மீட்டர் நீளம் 59 மீட்டர் உயரம் கொண்ட எவர்கிரீன் என்ற கப்பல் சமீபத்தில் மணல் புயல் காரணமாக இந்த கால்வாயில் கடந்த சில நாட்களுக்கு முன் சிக்கிக்கொண்டது. இதனை அடுத்து இரு பக்கங்களிலும் சுமார் 300க்கும் மேற்பட்ட கப்பல்கள் கால்வாயை கடக்க முடியாமல் காத்திருந்தன.

இந்த நிலையில் நெதர்லாந்திலிருந்து நிபுணர் குழுவினர் சுயஸ் கால்வாயை விரைந்து எவர்க்ரீன் கப்பலை மீட்கும் பணியில் மேற்கொண்டனர். ஆறு நாட்கள் போராட்டத்திற்கு பின்னர் தற்போது கப்பல் மீட்கப்பட்டுள்ளதாகவும் தற்போது கப்பல் மிதக்க தொடங்கி இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.

சூயஸ் கால்வாயில் தரைதட்டி நின்ற எவர்கிரீன் என்ற சரக்கு கப்பல் வெற்றிகரமாக மீட்கப்பட்டதை அடுத்து உலக நாடுகள் நிம்மதி அடைந்துள்ளன.

வணிகம்16 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?