செய்திகள்
முப்படை தளபதி தமிழகம் கொடுத்த மரியாதை – நெகிழ்ச்சி வீடியோ
குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது.
இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்பட 13 பேர் பலியாகினர் என்பதும் கேப்டன் வருண்சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.பலியான வீரர்களின் உடல்கள் இன்று முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், இறுதி சடங்குக்காக மரணமடைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் மற்ற ராணுவ அதிகாரிகளின் உடல்களை வாகனங்களில் கொண்டு சென்ற போது தமிழக மக்கள் பலரும் பூத்தூவி வணங்கி அஞ்சலி செலுத்தினர். இதில் சில தாய்மார்கள் அந்த வாகனங்கள் சென்ற வழியில் நின்று கதறி அழுது தங்களின் வீர வணக்கத்தை செலுத்தினர்.
இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைக்கண்ட நெட்டிசன்கள் பலரும் ‘இந்த விபத்து தொடர்பாக சில கட்சியினர் தமிழர்களின் தேசியபற்றை விமர்சித்து பேசி வருகின்றனர். ஆனால், எங்கு யாருக்கு எப்படி தேசப்பற்றை காட்ட வேண்டும் என தமிழர்களுக்கு தெரியும்’ என பதிவிட்டு வருகின்றனர்.
TN showed today what is patriotism to the rest of the world !! #RIPGenRawat #BipinRawat pic.twitter.com/dI4e8pTcWU
— மகாலிங்கம் பொன்னுசாமி / Mahalingam Ponnusamy (@mahajournalist) December 9, 2021