Connect with us

கிரிக்கெட்

‘இனிமேதான் தரமான சம்பவம் இருக்கு!’ – கிரிக்கெட்டுக்கு கம்-பேக் கொடுக்கும் நம்ப ‘சின்ன தல’ ரெய்னா

Published

on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களால் ‘சின்ன தல’ என்று அன்போடு அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா, கிரிக்கெட் போட்டிகளில் மீண்டும் விளையாட இருப்பதாக தகவல் வந்துள்ளது. 2020 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரிலேயே சென்னை அணி சார்பில் ரெய்னா விளையாட இருந்தார். இதற்காக அவர் சிஎஸ்கே அணியினருடன் ஐக்கிய அரபு அமீரகமும் சென்றார். ஆனால், கடைசி நேரத்தில் ஏற்பட்ட குடும்ப சிக்கல் காரணமாக அவர் தொடரிலிருந்து விலகினார். அவர் இல்லாத காரணத்தினால் சிஎஸ்கே, இந்த ஆண்டு ஐபிஎல்-ஐ மோசமாக விளையாடியது. அவர் இல்லாத வெற்றிடத்தை அனைவரும் உணர்ந்தனர். இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னா, கட்டாயம் விளையாடுவார் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐபிஎல் தொடருக்கு முன்னோட்டமாக எதிர்வரும், பிசிசிஐ-யால் நடத்தப்படும் சயித் முஸ்தக் அலி டிராஃபியில் ரெய்னா உத்தர பிரதேச அணிக்காக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணிக்கு அவரே கேப்டன் பொறுப்பையும் ஏற்பார் என்று சொல்லப்படுகிறது.

ரெய்னா கடைசியாக 2019 ஆம் ஆண்டுதான் நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில்தான் சர்வதேச கிரிக்கெட் விளையாடினார். அதன் பிறகு கொரோனா தொற்று காரணமாக, குடும்ப பிரச்சனை காரணமாகவும் மிகப் பெரிய பிரேக் விழுந்துவிட்டது. அதை சரிகட்டும் நோக்கில் அடுத்தடுத்து கவனம் செலுத்த இருக்கிறார் ரெய்னா. சில மாதங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ரெய்னா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

வணிகம்19 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு3 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?