Connect with us

தமிழ்நாடு

ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய 11-ம் வகுப்பு மாணவன்!

Published

on

திருச்சியில் ஆசிரியை ஒருவர் குளிப்பதை 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஆசிரியை திருச்சி மணப்பாறை அருகில் உள்ள ஆவாரம்பட்டியில் இருக்கும் நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவரது கணவரும் வெளியூர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த ஆசிரியை சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும் போது ஜன்னலில் கை ஒன்று தெரிந்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியை அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் பக்கத்து வீட்டில் உள்ள 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மீது சந்தேகம் கொண்ட ஆசிரியை அந்த மாணவனின் பெற்றோரை அழைத்து எச்சரித்துள்ளார். இதனையடுத்து ஆசிரியையின் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் துண்டு சீட்டு ஒன்றை எழுதி வீசிவிட்டு சென்றுள்ளார்.

அந்த துண்டு சீட்டில் ஆசிரியையின் அந்தரங்க உறுப்புகளை வர்ணித்தும், எந்த இடங்களில் மச்சம் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக யாரிடமாவது புகார் தெரிவித்தால் குளிக்கும் போது எடுத்த வீடியோவை ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வெளியிடுவேம் என மிரட்டியுள்ளனர்.

இதனையடுத்து அந்த ஆசிரியை தனது கணவரிடம் இதனை கூறி இருவரும் சேர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் சந்தேகத்துக்குறிய பக்கத்து வீட்டு மாணவனின் வீட்டுப்பாட நோட்டில் இருக்கும் கையெழுத்தையும், துண்டு சீட்டில் இருந்த கையெழுத்தையும் ஒப்பிட்டு அந்த மாணவனிடம் விசாரணை நடத்தினர்.

அதில், தன்னுடன் சேர்ந்து மேலும் 2 மாணவர்கள் கடந்த 2 வருடங்களாக ஆசிரியை குளிப்பதை மறைந்திருந்து பார்த்து வருவதாகவும், ஒரு கட்டத்தில் அதனை செல்போன் கேமரா மூலம் படம் பிடித்து வந்ததாகவும் கூறியுள்ளான். இதனையடுத்து அந்த மூன்று மாணவர்களையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் மெம்மரி கார்டையும் பறிமுதல் செய்தனர்.

வணிகம்6 மணி நேரங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்4 வாரங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி1 மாதம் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்2 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்2 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்2 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு2 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்3 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்3 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்3 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?