தமிழ்நாடு
ஆசிரியை குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய 11-ம் வகுப்பு மாணவன்!
திருச்சியில் ஆசிரியை ஒருவர் குளிப்பதை 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிலர் மறைந்திருந்து வீடியோ எடுத்து மிரட்டிய அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
பாதிக்கப்பட்ட ஆசிரியை திருச்சி மணப்பாறை அருகில் உள்ள ஆவாரம்பட்டியில் இருக்கும் நடுநிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவரது கணவரும் வெளியூர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அந்த ஆசிரியை சில தினங்களுக்கு முன்னர் தன்னுடைய குளியலறையில் குளித்துக்கொண்டிருக்கும் போது ஜன்னலில் கை ஒன்று தெரிந்துள்ளது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆசிரியை அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் பக்கத்து வீட்டில் உள்ள 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் மீது சந்தேகம் கொண்ட ஆசிரியை அந்த மாணவனின் பெற்றோரை அழைத்து எச்சரித்துள்ளார். இதனையடுத்து ஆசிரியையின் வீட்டுக்குள் மர்ம நபர் ஒருவர் துண்டு சீட்டு ஒன்றை எழுதி வீசிவிட்டு சென்றுள்ளார்.
அந்த துண்டு சீட்டில் ஆசிரியையின் அந்தரங்க உறுப்புகளை வர்ணித்தும், எந்த இடங்களில் மச்சம் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக யாரிடமாவது புகார் தெரிவித்தால் குளிக்கும் போது எடுத்த வீடியோவை ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பில் வெளியிடுவேம் என மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து அந்த ஆசிரியை தனது கணவரிடம் இதனை கூறி இருவரும் சேர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் சந்தேகத்துக்குறிய பக்கத்து வீட்டு மாணவனின் வீட்டுப்பாட நோட்டில் இருக்கும் கையெழுத்தையும், துண்டு சீட்டில் இருந்த கையெழுத்தையும் ஒப்பிட்டு அந்த மாணவனிடம் விசாரணை நடத்தினர்.
அதில், தன்னுடன் சேர்ந்து மேலும் 2 மாணவர்கள் கடந்த 2 வருடங்களாக ஆசிரியை குளிப்பதை மறைந்திருந்து பார்த்து வருவதாகவும், ஒரு கட்டத்தில் அதனை செல்போன் கேமரா மூலம் படம் பிடித்து வந்ததாகவும் கூறியுள்ளான். இதனையடுத்து அந்த மூன்று மாணவர்களையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன் மற்றும் மெம்மரி கார்டையும் பறிமுதல் செய்தனர்.